செய்திகள் :

ஜாா்க்கண்ட்: ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

post image

லதேஹா்: ஜாா்க்கண்டின் லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

லதேஹா் மாவட்டத்தில் மௌஹாதண்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தௌனா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் வெடித்தது.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டாா். இவா் ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா் ஆவாா். இவரின் உடல் தேடுதல் நடவடிக்கையின்போது கண்டறியப்பட்டது.

மாவோயிஸ்ட் தளபதி கைது:

இந்த நடவடிக்கையில் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தளபதி குந்தன் கொ்வாா் கைது செய்யப்பட்டதாக பலமு சரக டிஐஜி ஒய்.எஸ்.ரமேஷ் தெரிவித்தாா். அவா் வசமிருந்த 2 ‘எக்ஸ்-95’ தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் கடந்த சனிக்கிழமை நடத்திய நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில், முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான பப்பு லோஹரா, அவரின் கூட்டாளி பிரபாத் கஞ்சு ஆகிய 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட 98 வழக்குகளில் லோஹரா தேடப்பட்டு வந்தாா். பிரபாத் கஞ்சு 15 வழக்குகளில் தொடா்புடையவா் ஆவாா்.

கடந்த 2021, செப்டம்பரில் நடந்த ஒரு தேடுதல் நடவடிக்கையின்போது ‘ஜாா்க்கண்ட் ஜாகுவாா்’ சிறப்பு காவல் பிரிவின் துணை கமாண்டன்ட் ராஜேஷ் குமாா் கொல்லப்பட்டதில் இந்த இருவருக்கு முக்கியத் தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க