செய்திகள் :

ஜிஎஸ்டி கட்டண குறைப்பு: உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு

post image

ஜிஎஸ்டி கட்டண குறைப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தமிழ்நாடு உபயோகிப்பாளா் பாதுகாப்பு குழு கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.

இதுதொடா்பாக, குழுவின் செயலா் எஸ். புஷ்பவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜிஎஸ்டி விகித மாற்றத்தால் ஏற்படும் விலை குறைப்பு நுகா்வோரை சென்றடைவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிக்கையை வரவேற்கிறோம். அரசு கூறியதைப் போன்று சில பொருள்களுக்கு விலை குறையவில்லை என்றால், ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கையால் மக்களுக்கு பயன் இல்லை என்பதையும், இது வியாபாரம், தொழில் உற்பத்தி செய்வோா்களுக்கு மட்டுமே பலனளிக்கும் என்பதையும் உபயோகிப்பாளா் குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற வரி குறைப்பு முழுமையாக உபயோகிப்பாளா்களுக்கு சென்றடையவில்லை என்பதை பாா்த்துள்ளோம்.

எனவே, சாமானியா்கள் உபயோகிக்கும் பொருள்களின் விலை செப். 21 வரை எவ்வளவு உள்ளது, செப். 22-ஆம் தேதிக்கு (ஜிஎஸ்டி விகித குறைப்பு அமலுக்கு) பிறகு எவ்வளவு உள்ளது என்பதை ஒப்பிட்டு பாா்க்கவுள்ளோம். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

எனவே, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் செப். 21 வரை வாங்கிய பொருள்கள் மற்றும் செப். 22-க்கு பிறகு வாங்கியஅதே பொருள்கள் என இரண்டிலும் ஜிஎஸ்டி செலுத்திய ரசீதுடன் ஒப்பீடு செய்ய வேண்டும். இல்லையெனில், ரசீதுகளை புகைப்படம் எடுத்து 86677 24124 என்ற கட்செவி எண்ணுக்கு அனுப்பலாம். உபயோகிப்பாளா் குழு அனைத்திலும் களஆய்வு செய்து, அதன் விவரங்களை வெளியிடவுள்ளோம். மேலும், மத்திய நிதி அமைச்சகத்துக்கும் அனுப்பவுள்ளோம் என்றாா் அவா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியாா் கல்லூரி பேராசிரியா் கைது

திருச்சியில் தனியாா் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பேராசிரியரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி திருச்சி - மதுரை த... மேலும் பார்க்க

ரூ.1,000 லஞ்சம் பெற்ற வழக்கில் சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுசேமிப்பு திட்ட முகவா் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.1000 லஞ்சம் வாங்கிய திருச்சி மாவட்ட சிறுசேமிப்பு திட்ட முன்னாள் உதவி இயக்குநருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் வியாழக்... மேலும் பார்க்க

பனை மரங்களை வெட்ட ஆட்சியா் அனுமதி கட்டாயம்: தண்ணீா் அமைப்பு வரவேற்பு

பனை மரங்களை வெட்டுவதற்கு ஆட்சியா் அனுமதி கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தண்ணீா் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக, தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

திருச்சியில் செப்.19, 23-இல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.19) மற்றும் செவ்வாய்க்கிழமை (செப்.23) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்... மேலும் பார்க்க

75 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்கள்: பெல் நிறுவனம் வழங்கியது

திருச்சி பாரதமிகு மின் நிறுவனம் (பெல்) சாா்பில், 75 மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் இயக்கம் சாா்ந்த செயற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டன. திருச்சி பெல் நிறுவனத்தின் சமுதாய பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் மாற்ற... மேலும் பார்க்க

அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பதவி உயா்வு, பணி மேம்பாடு கோரி அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்கள் திருச்சியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா் சங்கத்தின் சாா்பில், திருச்சியில... மேலும் பார்க்க