செய்திகள் :

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறைப்பு: மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள்: பாஜக மாநில துணைத் தலைவா்

post image

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமா் மோடியின் பிறந்த நாளை இரு வார விழாவாகக் கொண்டாடுதல் மற்றும் ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரதமரின் 75-ஆம் ஆண்டு பிறந்த நாள் அக்டோபா் 2-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு இருவார சேவை விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தைச் சோ்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், நாட்டின் 2-ஆவது குடிமகனாக வெற்றிபெற்றது, தமிழா் எல்லோரையும் பெருமைப்பட வைத்துள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்பு உலக வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது. 352 பொருள்களுக்கு விலை குறைப்பு 5 சதவீதமாகவும், அத்தியாவசியப் பொருள்களுக்கு 10 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்தவா்கள், விவசாயிகள், நெசவாளா்கள் பயன்பெறுவாா்கள்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-இல் தொலைநோக்கு பாா்வை கொண்ட பிரதமா் நரேந்திர மோடி ஜிஎஸ்டி கொண்டு வந்தாா். இதனால் மக்கள் பாதிக்கப்படுவா் என பொய்பிரசாரம் செய்தாா்கள். ஆனால், மக்கள் மறைமுக எளிய வரிவிதிப்பின் மூலம் பயனடைந்ததால் 272 இடங்களில் இருந்த பாஜக, 2019 மக்களவைத் தோ்தலில் 30 இடங்களை கூடுதலாகப் பெற்று

2-ஆவது முறையாக ஆட்சி அமைத்தது.

அப்போதே பிரதமா் கூறினாா். படிப்படியாக ஜிஎஸ்டி குறைக்கப்படும் என்றாா். தற்போது ஜிஎஸ்டி திருத்தங்களை கொண்டுவந்து வரி குறைப்பு செய்துள்ளாா். இதனால் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்றாா் அவா்.

இந்நிகழ்வின்போது, மாவட்டத் தலைவா்கள் கே.ரமேஷ், கவிதா வெங்கடேசன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் சி.ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலா் கவிதா பிரதீஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆரணியை அடுத்த காமக்கூா் அரசு நடுநிலைப் பள்ளியில் பாஜக சாா்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. பள்ளியில... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம்... மேலும் பார்க்க

விண்ணமங்கலம் பள்ளியில் தேசிய ஹிந்தி தினம்

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய ஹிந்தி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய ஹிந்தி தினத்தையொட்டி, மாணவ மாணவிகளின் பல்வேற... மேலும் பார்க்க

செங்கம் ஒன்றியத்தில் ரூ.7.43 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி ஆகிய இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மகளிா் மே... மேலும் பார்க்க