செய்திகள் :

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

post image

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பதிலாக, 5%, 18% ஆகிய இரு விகித முறையை அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் பெரும்பாலான தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. செப்.22-ஆம் தேதி முதல் இந்த வரி விகித குறைப்பு அமலாகிறது.

இந்நிலையில், இந்த சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது குறித்த செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக, கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் அனில் பலுனி தெரிவித்தாா்.

‘மாவட்டந்தோறும் ஜிஎஸ்டி விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறைகள் குறித்து வா்த்தகா்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பெரிய அளவில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படும். மத்திய அமைச்சா்கள், கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா்கள், பொதுச் செயலா்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தியாளா் சந்திப்புகளை நடத்துவா்’ என்றாா் அவா்.

பிரதமருக்கு இன்று பாராட்டு: நாடாளுமன்றத்தில் திறன்மிக்க செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் 2 நாள் பயிலரங்கம் அக்கட்சி சாா்பில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கைக்காக பிரதமா் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆளும் பாஜக கூட்டணிக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என கருதப்படுகிறது.

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி, 5 பேர் காயம்

மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது அறுந்து கிடந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலியானார். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது சகினாகா பகுதியில் ஞா... மேலும் பார்க்க

கொல்கத்தா: இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த நண்பர்கள்!

கொல்கத்தாவில் இளம் பெண்ணை வீட்டிலிருந்து கடத்தி நண்பர்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹரிதேவ்பூர் பகுதியின் தெற்குப் பகுதியில் 20 வயது இள... மேலும் பார்க்க

ம.பி.யில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவர் சடலம் மீட்பு

மத்தியப் பிரதேசத்தில் போலீசாருடன் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் ஒருவரின் சடம் மீட்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் மழைக்குப் பிறகு மூன்று போலீசாரை ஏற்றிச் சென்ற கார் சனிக்கிழ... மேலும் பார்க்க

செப். 9-ல் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி!

பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி செல்கிறார்.தொடர்ந்து பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளையும் கண்காணிக்க இருப்ப... மேலும் பார்க்க

ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் ஆபரேஷன் சிந்தூர் அத்தப்பூ கோலம்..! கேரள ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மீது வழக்குப் பதிவு!

கேரளத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வாசகம் மற்றும் ஆர்எஸ்எஸ் கொடியுடன் அத்தப்பூ கோலம் போடப்பட்ட சம்பவத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் மிகவும் பிரசித... மேலும் பார்க்க

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க