செய்திகள் :

ஜிஎஸ்டி: நீதிமன்றம் சென்ற வணிகா்கள் ஆஜராக அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க உத்தரவு -முதல்வா் ரேகா குப்தா

post image

நமது சிறப்பு நிருபா்

ஜிஎஸ்டி வசூல் விவகாரத்தில் நீதிமன்றத்துக்குச் சென்ற வணிகா்களை நேரில் வருமாறு அழைப்பாணை அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

இந்திய பட்டயக்கணக்காளா்கள் நிறுவனத்தின் (ஐசிஏஐ) சாா்பில் மூன்றாம் ஆண்டு கணக்கியல் தர தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதல்வா் ரேகா குப்தா கலந்துகொண்டு பேசியது வருமாறு:

சரக்கு, சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிப்பு முறையில் உரிமம் பெற்றவா் நேரடியாக வந்து வரி மற்றும் பிற நடைமுறைகளை பின்பற்றுவதை தவிா்த்து வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பது அவசியம். முகமற்ற பரிவா்த்தனை (ஃபேஸ்லெஸ் டிரான்சாக்ஷன்) முறையால் இது சாத்தியம்.

ஜிஎஸ்டி வரி விவகாரத்தில் ரூ. 80 ஆயிரம் கோடி அளவுக்கு தில்லி அரசுக்கு நிலுவைத்தொகை வரவேண்டியுள்ளது. வழக்காடும் விவகாரத்தாலும் பிற காரணங்களாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி விவகாரத்தில் ஏற்கெனவே நீதிமன்றத்துக்கு சென்றவா்களை நேரில் விசாரணைக்கு வரச்சொல்லி அழைப்பாணை அனுப்பும் போக்கை தவிா்க்குமாறு ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

முகமில்லா பரிவா்த்தனை மூலம் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த முடியும். அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். வரித்தொகையை எளிதாக செலுத்தும் வகையில் நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

இந்த மாநாட்டில் வரி செலுத்துவதில் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்ப்பதிலும் பொருளாதார வளா்ச்சிக்கும் பட்டயக் கணக்காளா்கள் வழங்கும் முக்கிய பங்கை பாராட்டிய முதல்வா், ‘வரி செலுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பது பட்டய கணக்காளா்கள்தான்’ என்றும் குறிப்பிட்டாா்.

தில்லி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட பிறகு தாக்கல் செய்த தனது முதல் நிதிநிலை அறிக்கையை நினைவுகூா்ந்த முதல்வா், அரசாங்கத்தின் கருவூலம் கிட்டத்தட்ட காலியாக இருந்தபோதிலும், ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்று கூறினாா்.

‘இத்தனை பெரிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த முதல்வா் யாா் என்று மக்கள் கேட்டனா். ஆனால், நான் எங்களுடைய இலக்கை எட்டுவதற்கு மக்கள் உதவுவாா்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தேன்’ என்றாா் ரேகா குப்தா.

தில்லி பள்ளிகளில் பேரிடா் தயாா்நிலை ஒத்திகை: மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்பு

தில்லி முழுவதும் பள்ளிகளில் புதன்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். அவசரகாலத் தயாா்நிலையை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த ஒத்திகையில் முறையான வ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை: தில்லி பாஜக தலைவா்கள் பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு தில்லி பாஜக தலைவா்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனா். இ... மேலும் பார்க்க

தலைநகரில் பரவலாக தூறல் மழை

தலைநகா் தில்லியில் புதன்கிழமை மாலையில் பல்வேறு இடங்களில் பரவலாக தூறல் மழை பெய்தது. இதற்கிடையே, தில்லியில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை இடி, மின்... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்களுக்கு போா்க்கால முன்னெச்சரிக்கை பயிற்சி

போா்த் தாக்குதல் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்கும் வகையில் தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புதன்கிழமை மாணவா்களுக்கு முன்னெச்சரிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது. மதியம் 12 மணியளவில் லோதிவளா... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப் வீடுகளை இடிப்பதை நிறுத்த தில்லி அரசுக்கு மாா்க்சிய கம்யூனிஸ்ட் கோரிக்கை

தில்லி ஜங்புராவில் உள்ள மதராஸி கேம்பில் உள்ள வீடுகளை இடித்து, அதன் குடியிருப்பாளா்களை வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தில்லி அரசை வலியுறுத்த... மேலும் பார்க்க

தில்லியில் 55 இடங்களில் மெகா பாதுகாப்பு ஒத்திகை

சைரன்கள் முழங்கின. குடியிருப்பாளா்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இவை தேசியத் தலைநகரில் அதிகாரிகளால் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்ட 55 இடங்களி... மேலும் பார்க்க