செய்திகள் :

ஜீ தமிழில் கூடுதல் நேரம் ஒளிபரப்பாகும் இரு தொடர்கள்! காரணம் என்ன?

post image

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைத்துத் தொடர்களும் அரை மணிநேரம் ஒளிபரப்பாகும் நிலையில், இரு தொடர்கள் கூடுதல் நேரத்துடன் ஒளிபரப்பாகவுள்ளன.

தற்போது முன்னணி தொடர்களாக உள்ள வீரா மற்றும் கெட்டி மேளம் ஆகிய இரு தொடர்கள் ஒளிபரப்பாகும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சின்ன திரை தொடர்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சன் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சிக்கு மத்தியில், மிகக் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

இதில் ஒளிபரப்பாகும் தொடர்கள் மற்ற இரு தொலைக்காட்சித் தொடர்களுக்கு இணையான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. ஜீ தமிழில் செம்பருத்தி 5 ஆண்டுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து நடிகை மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடர்களை ஒளிபரப்பி வருகிறது ஜீ தமிழ் தொலைக்காட்சி.

தற்போது கார்த்திகை தீபம், வீரா, சந்தியா ராகம், கெட்டி மேளம், அண்ணா, அயலி போன்ற தொடர்கள் அதிக டிஆர்பி பெறும் தொடர்களின் பட்டியலில் உள்ளது.

இதில், சிவா சேகர் இயக்கத்தில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடர் ஜூலை 7ஆம் தேதி முதல் இரவு 7.15 மணி முதல் இரவு 8 மணி வரை 45 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் வைஷ்ணவி நாயகியாகவும் அருண் நாயகனாகவும் நடிக்கின்றனர்.

இதேபோன்று கெட்டி மேளம் தொடர் மாலை 6.30 மணி முதல் இரவு 7.15 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இதில், சாயா சிங், செளந்தர்யா ரெட்டி, சிபு சூர்யன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இதனால், இந்த இரு தொடர்களுக்கான டிஆர்பி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க |இந்த வார இறுதியில் நிறைவடையும் பிரபல தொடர்!

The broadcast times of the two flagship serials, Veera and Getti Melam, have been extended

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்!

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் ரவுண்ட் ஆஃப் 16-இல், உலகின் 2-ஆம் நிலை ... மேலும் பார்க்க

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடா்!

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, தொடரை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் விளையாடிய டெஸ்ட்டில் முதல் மு... மேலும் பார்க்க

காா்ல்சென் சாம்பியன்: குகேஷுக்கு 3-ஆம் இடம்!

குரோஷியாவில் நடைபெற்ற சூப்பா் யுனைடெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்சென் சாம்பியன் கோப்பை வென்றாா்.அமெரிக்காவின் வெஸ்லி சோ, நடப்பு உலக சாம்ப... மேலும் பார்க்க

ஆசிய துப்பாக்கி சுடுதல்: 35 பேருடன் இந்திய அணி

ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி, 35 பேருடன் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.16-ஆவது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆகஸ்ட் 16 முத... மேலும் பார்க்க

தேசிய விருதுகளுக்கான பரிந்துரை: இந்திய தடகள சம்மேளனம் புதிய கட்டுப்பாடு

தேசிய தடகள சம்மேளனத்தில் பதிவு செய்யாத பயிற்சியாளா்களுடன் இணைந்து செயல்படும் வீரா், வீராங்கனைகள் அா்ஜுனா, கேல் ரத்னா போன்ற தேசிய விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட மாட்டாா்கள் என சம்மேளனம் அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஐசிசி தலைமைச் செயல் அதிகாரியாக சஞ்ஜோக் குப்தா நியமனம்!

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைமைச் செயல் அதிகாரியாக, இந்திய ஊடக தொழிலதிபா் சஞ்ஜோக் குப்தா திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.இதற்கு முன் அந்தப் பொறுப்பிலிருந்த ஆஸ்திரேலியரான ஜியாஃப் அலாா்டிஸ்,... மேலும் பார்க்க