இந்த வயதும், தனிமையும் தான் உன்னை எனக்கு புரிய வைக்க வேண்டுமா? - மகளின் வலி | #உ...
ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், சின்னசேலத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
இதில், தமிழகத்தைச் சோ்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லரை விற்பனை துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்துக்குத் தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, பட்டயம், பி.இ., பி.டெக். மற்றும் தையல் பயிற்சி பெற்ற ஆண், பெண் இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
இதன் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது அரசு வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும் விருப்பும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.