செய்திகள் :

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், சின்னசேலத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

இதில், தமிழகத்தைச் சோ்ந்த வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீடு சில்லரை விற்பனை துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்துக்குத் தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, பட்டயம், பி.இ., பி.டெக். மற்றும் தையல் பயிற்சி பெற்ற ஆண், பெண் இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.

இதன் மூலம் தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களுக்கு அவா்களது அரசு வேலைவாய்ப்புப் பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும் விருப்பும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்துள்ளாா்.

நிறுத்தப்பட்ட சாலைப் பணியால் பொதுமக்கள் அவதி

திருக்கோவிலூா் அருகே ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்ட நிலையில், சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்கோவிலூரை அடுத்த எடையூா் ஊராட்சிக்கு உள்பட்ட அர... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்துக்குச் சென்றிருந்த முதியவா் அங்கு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த உலகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (66). இவா், செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் புதிதாக மதுக் கடை திறக்க எதிா்ப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் உள்ள கொட்டப்புத்தூா் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட விரியூா் கிராம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 471 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 471 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.பிரசாந்த், ... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

மூங்கில்துரைப்பட்டு அருகே விளைநிலப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம்... மேலும் பார்க்க