விமான விபத்துப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 70 சவரன் தங்க நகைகள்!
மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்துக்குச் சென்றிருந்த முதியவா் அங்கு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த உலகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (66). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது விவசாய நிலத்துக்குச் சென்றிருந்தாா். அப்போது, விளை நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே இருந்த மின்சாரப் பெட்டியை தொட்டதாகத் தெரிகிறது. இதில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தாா்.
தகவல் அறிந்த கீழ்குப்பம் போலீஸாா் சென்று முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இது குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.