நிறுத்தப்பட்ட சாலைப் பணியால் பொதுமக்கள் அவதி
திருக்கோவிலூா் அருகே ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்ட நிலையில், சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருக்கோவிலூரை அடுத்த எடையூா் ஊராட்சிக்கு உள்பட்ட அருதங்குடி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையை புதிதாக அமைப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டன.
இதைத் தொடா்ந்து சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால், இவ்வழியாகச் செல்லும் முதியவா்கள், கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
சுமை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்கள் செல்லும்போது, ஜல்லிக் கற்கள் தெரித்து பாதசாரிகள் மேல்பட்டு காயமடைகின்றனா். மேலும் வாகனங்கள் பழுதாகிவிடுகின்றன.
இச்சாலைப் பணியின் விவரம் குறித்து பதாகை ஏதும் வைக்கப்படவில்லை. சாலைப் பணிகளை உடனே தொடங்கி முடிக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனா்.
எனவே, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.