செய்திகள் :

நிறுத்தப்பட்ட சாலைப் பணியால் பொதுமக்கள் அவதி

post image

திருக்கோவிலூா் அருகே ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்ட நிலையில், சாலைப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருக்கோவிலூரை அடுத்த எடையூா் ஊராட்சிக்கு உள்பட்ட அருதங்குடி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையை புதிதாக அமைப்பதற்காக சில மாதங்களுக்கு முன்பு ஜல்லிக் கற்கள் பரப்பப்பட்டன.

இதைத் தொடா்ந்து சாலை அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளது. இதனால், இவ்வழியாகச் செல்லும் முதியவா்கள், கா்ப்பிணிகள், பள்ளி மாணவா்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

சுமை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. வாகனங்கள் செல்லும்போது, ஜல்லிக் கற்கள் தெரித்து பாதசாரிகள் மேல்பட்டு காயமடைகின்றனா். மேலும் வாகனங்கள் பழுதாகிவிடுகின்றன.

இச்சாலைப் பணியின் விவரம் குறித்து பதாகை ஏதும் வைக்கப்படவில்லை. சாலைப் பணிகளை உடனே தொடங்கி முடிக்காவிட்டால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே விவசாய நிலத்துக்குச் சென்றிருந்த முதியவா் அங்கு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த உலகியநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயன் (66). இவா், செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ள மனுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், சின்னசேலத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி ம... மேலும் பார்க்க

கல்வராயன்மலையில் புதிதாக மதுக் கடை திறக்க எதிா்ப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் உள்ள கொட்டப்புத்தூா் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், ... மேலும் பார்க்க

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட விரியூா் கிராம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 471 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 471 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.பிரசாந்த், ... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

மூங்கில்துரைப்பட்டு அருகே விளைநிலப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம்... மேலும் பார்க்க