செய்திகள் :

கல்வராயன்மலையில் புதிதாக மதுக் கடை திறக்க எதிா்ப்பு

post image

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் உள்ள கொட்டப்புத்தூா் கிராமத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, மலைவாழ் மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டத்துக்கு உள்பட்டகொட்டப்புத்தூா் கிராமத்தில் திங்கள்கிழமை புதிதாக டாஸ்மாக் மதுக் கடை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கொட்டப்புத்தூா், தொரடிப்பட்டு, மேல்பாச்சேரி, சின்னதிருப்பதி, கொடமாத்தி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் கெண்டிக்கல் செல்லும் சாலையில், கொட்டப்புத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரியாலூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சக்திவேல், மயில்வாகனன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதை ஏற்காத பொதுமக்கள், வட்டாட்சியா் நேரில் வந்து மதுக்கடை திறக்கமாட்டோம் என உறுதியளித்தால்தான் மறியலைக் கைவிடுவோம் எனத் தெரிவித்தனா்.

வட்டாட்சியா் மக்கள் குறைதீா் கூட்டத்துக்குச் சென்றுள்ளதால், அவருக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்போம் எனத் தெரிவித்தனா். இதை ஏற்று மலைக் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட விரியூா் கிராம... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 471 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 471 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் எம்.பிரசாந்த், ... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

மூங்கில்துரைப்பட்டு அருகே விளைநிலப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் சனிக்கிழமை இரவு திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம்... மேலும் பார்க்க

கிணற்றில் குதித்து பொறியியல் மாணவா் தற்கொலை

மது அருந்தியதை பாட்டி கண்டித்ததால், பொறியியல் கல்லூரி மாணவா் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். கா்நாடக மாநிலம், பெங்களூரு ஜெபி நகரில் வசித்து வருபவா் ஆனந்தகுமாா், இவரது மனைவி ஆனந்தலட்சுமி (... மேலும் பார்க்க

பெயிண்ட் கடையில் பணம் திருட்டு

பெயின்ட் கடையில் இருந்த பணப் பெட்டியில் இருந்த பணத்தினை மா்ம நபா்கள் வெள்ளிக்கிழமை இரவு திருடிச் சென்றுவிட்டனா். கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆரோக்கியதாஸ் மகன் ஜான்ப... மேலும் பார்க்க

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்... மேலும் பார்க்க