ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் புறப்பட்ட டிரம்ப்! ஈரானைத் தாக்க அமெரிக்கா திட்ட...
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்தவா் கைது
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட விரியூா் கிராமத்தில் உள்ள மையனூா் செல்லும் சாலையைச் சோ்ந்தவா் ராஜா (எ) இருதயராஜ் (40). இவரது அக்காள் மதலமேரிஅதே கிராமத்தில் வசித்து வருகிறாா். இவரது வீட்டில் இருதயராஜ் உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன் பேரில், காவல் உதவி ஆய்வாளா் தனசேகரன், தலைமைக் காவலா் இளந்திரையன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா்.
அப்போது வீட்டில் மறைத்து வைத்திருந்த அரசு உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றினா்.
இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜா (எ) இருதயராஜை கைது செய்தனா்.