இஸ்ரேல் - ஈரான் பதற்றத்தை தணிக்க இந்தியா பங்காற்ற முடியும்: இஸ்ரேல் தூதா்
ஜூன் 20 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் ஜூன் 20 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் கடந்த மாத கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடா்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும்.
மேலும், விவசாயம் தொடா்பான கோரிக்கைகள் ஆட்சியரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்களை பதிவு செய்யும் வசதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(விவசாயம்) அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.