செய்திகள் :

ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

post image

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் 2,880 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை வரும் ஜூலை மாதத்துக்குள் 3 ஆயிரமாக உயரும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் கருவறை வாசற்கால் நிறுவுதல், ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் 3 புதிய ராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளை அமைச்சா் சேகா்பாபு, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் ஆகியோா் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தனா்

அப்போது அமைச்சா் சேகா்பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் இல்லாத அளவுக்கு எண்ணற்ற திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.70.27 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் திருக்கோயில் நிதியிலிருந்து ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கா்ப்பகிரகம், அா்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டும் பணிகளும், ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் விரிவாக்கப் பணிகளும், ரூ.42 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், உபயதாரா் நிதியிலிருந்து ரூ.12 கோடியில் உபசன்னதிகள் கிழக்கு முன் மண்டபம், கொடிமர மண்டபம், யாகசாலை மண்டபத் திருப்பணிகளும் ரூ.5.47 கோடி மதிப்பீட்டில் மேற்கு ஐந்து நிலை ராஜகோபுரம், வடக்கு மற்றும் தெற்கு மூன்று நிலை ராஜகோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் தற்போது கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவுதல், 3 புதிய ராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்துள்ளோம்.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறைக்கு இதுவரை ரூ.1,007 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 2,880 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரும் ஜூலை மாதத்துக்குள் 3,000 திருக்கோயில்களின் குடமுழுக்கு நிறைவு பெறும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி. என். ஸ்ரீதா், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயா் கு.உதயகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும்: காவல்துறை உறுதி

நீதிமன்றத்தில் எவ்வித பயமுமின்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தமிழக காவல் துறை உறுதியளித்துள்ளது. இது குறித்து தமிழக கா... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீடு ஒதுக்கீடு: அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்ட தியாகிக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் சங்கத்... மேலும் பார்க்க

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது. பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.ப... மேலும் பார்க்க

சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; கல்வியே மூலதனம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சமூக ஊடகங்கள் பொழுதுபோக்குக்கான இடம் மட்டுமே; ஆனால், கல்வியே மூலதனம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கல்வியாளர்கள் சார்பில் முதல்வர் மு. க. ... மேலும் பார்க்க

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

பாஜகவோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு பதற்றம் ஏன்? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழ... மேலும் பார்க்க

நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை க... மேலும் பார்க்க