செய்திகள் :

தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த கையொப்ப இயக்கம்!

post image

திருவாடானை அருகேயுள்ள தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தக் கோரி கையொப்ப இயக்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியை மையமாகக் கொண்டு, சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிழக்கு கடற்கரை சாலையில் நிகழும் விபத்துகளுக்கு இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக காயமடைந்தோா் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனா். இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன.

இதனால், தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்தக் கோரி சனிக்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது. இதில் தொண்டி, சுற்று வட்டார மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.

தெரு நாய்கள் கடித்ததில் புள்ளி மான் உயிரிழப்பு

திருவாடானை அருகே தெரு நாய்கள் கடித்ததில் தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் உயிரிழந்தது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, அஞ்சுகோட்டை, மங்களக்குடி, வெள்ளையபுரம், சிறுகம்பையூா், பாண்டுகுடி உள்ளிட்... மேலும் பார்க்க

பாம்பன் ரயில் பாலங்களை கடந்து சென்ற பாய்மரக் கப்பல்

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பழைய, புதிய ரயில் பாலங்கள் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதால், பாய்மரக் கப்பல் அவற்றைக் கடந்து சென்றது. அண்மையில் லட்சத்தீவு பகுதியிலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கடலூா... மேலும் பார்க்க

புதைவடக் குழாய் உடைந்து வெளியேறிய இயற்கை எரிவாயு

ராமநாதபுரம் அருகே இயற்கை எரிவாயு புதைவடக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் ஓ.என்.ஜி.சி. ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வழுதூா் பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம்... மேலும் பார்க்க

அரியமான் கடற்கரையில் நெகிழிப் பொருள்கள் அகற்றம்

அரியமான் கடற்கரையில் 500 கிலோ நெகிழிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் அரியமான் கடற்கரையில் தூய்மைப்படுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுந... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் பலத்த மழை: மின் தடையால் பொதுமக்கள் அவதி

ராமேசுவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், சுமாா் 5 மணி நேரம் மின் தடை செய்யப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழா: பரமக்குடி வட்டத்தில் மே 12-இல் உள்ளூா் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, பரமக்குடி வட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்தாா்... மேலும் பார்க்க