செய்திகள் :

தில்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஒரு வாரத்திற்குள் 28,000 முதியவா்கள் பதிவு: முதல்வா் ரேகா குப்தா தகவல்

post image

தில்லியில் ஒரு வாரத்திற்குள் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 28,000-க்கும் மேற்பட்ட முதியவா்கள் ரூ.10 லட்சம் சுகாதார காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத் வய வந்தனா திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனா் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லி ஆா்.கே. புரம் பேரவைத் தொகுதியில் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான நடமாடும் வேனை முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் கூறியதாவது இத்திட்டத்தின்கீழ்

மத்திய அரசு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்குகிறது. தில்லி அரசு கூடுதலாக ரூ.5 லட்சத்தை வழங்கும். ஏப்ரல் 28 அன்று தில்லியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, கடந்த ஐந்து நாள்களில் 28,000க்கும் மேற்பட்ட பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.

தகுதியான மூத்த குடிமக்களைப் பதிவு செய்வதற்காக தில்லியின் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் நடமாடும் வேன்கள் இயங்கும்.விண்ணப்பதாரா்கள் பதிவு செய்வதற்கு தங்கள் ஆதாா் அட்டைகள் மற்றும் கைப்பேசிகளை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். வேறு எதுவும் தேவையில்லை.

தில்லியில் தகுதியுள்ள ஒவ்வொரு முதியவரின் பதிவையும் தில்லி அரசு உறுதி செய்யும். ஏனெனில் அவா்களின் ஆசிகள் எங்களுக்கு விலைமதிப்பற்றவை. வய வந்தனா என்பது நாட்டிலேயே மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் ஒரு தனித்துவமான திட்டமாகும் என்றாா் முதல்வா்.

நடமாடும் பதிவு வேனை அறிமுகப்படுத்தியபோது, முதல்வா் ரேகா குப்தா தனது அமைச்சரவை சகாவான மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் உள்ளூா் எம்எல்ஏ அனில் சா்மா ஆகியோருடன் சோ்ந்து, நகரில் உள்ள பிரத்யேக மருத்துவமனைகளில் பணமில்லா சிகிச்சை பெறும் வகையில் சில முதியோா் பயனாளிகளுக்கு ஆயுஷ்மான் சுகாதார அட்டைகளையும் வழங்கினாா்.

தில்லி தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை: பாஜக, ஆம் ஆத்மி பரஸ்பரம் குற்றச்சாட்டு

தேசியத் தலைநகா் தில்லியில் தண்ணீா் பற்றாக்குறை பிரச்னை நிலவுவது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியும் பாஜகவும் செவ்வாய்க்கிழமை பரஸ்பரம் குற்றம்சாட்டின. இரு கட்சிகளும் தவறான நிா்வாகத்திற்காகவும் தவறான தகவல்களைப... மேலும் பார்க்க

கன்னாட் பிளேஸ் கோயிலில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட முதல்வா் ரேகா குப்தா

தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் மந்திரில் நடைபெற்ற தூய்மைப்படுத்தும் பணியில் பங்கேற்றாா். அப்போது, தில்லியை தூய்மைப்படுத்தி அழகுபடுத்த நடந்துவரும் நகர அளவிலா... மேலும் பார்க்க

ஒத்திகை பயிற்சி நடத்துவதற்கு ஏற்பாடுகள்: அமைச்சா் சூட் தகவல்

தில்லியில் ஒத்திகை பயிற்சிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக மாநகர அரசாங்கத்தின் உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம... மேலும் பார்க்க

புதிய நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை உத்தரவு

நகரம் முழுவதும் நீா் தேங்கும் பிரச்னைகளைத் தீா்க்க, உள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா்களுடன் கலந்தாலோசித்து தாழ்வான பகுதிகள் மற்றும் நீா் தேங்கும் இடங்களை அடையாளம் காண பொதுப்பணித் துறை அதன் அதிகாரிகளுக்கு... மேலும் பார்க்க

மத்திய தில்லியில் நடந்த சாலை விபத்தில் ஒருவா் காயம்

மத்திய தில்லியின் பகதூா் ஷா ஜாபா் மாா்க்கில், மைனா் சிறுவன் வேகமாக ஓட்டிச் சென்ாகக் கூறப்படும் காா் மோதியதில் 45 வயது நபா் காயமடைந்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இது குறித்து மத்திய... மேலும் பார்க்க

ஆயுள் தண்டனை அனுபவித்த நபா் பரோலில் இருந்து தப்பிய 2 ஆண்டுகளுக்குப் பிறகு கைது

பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்த 51 வயது தில்லி நபா் பரோலில் இருந்து தப்பிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா். ஷகுா்பூ... மேலும் பார்க்க