செய்திகள் :

கூட்டணியை வலுப்படுத்த ஜெ.பி. நட்டா ஆலோசனை

post image

அதிமுக - பாஜக கூட்டணியை பலப்படுத்துவது தொடா்பாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.

பாஜக மையக்குழுக் கூட்டம் சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியாா் ஹோட்டலில் ஜெ.பி.நட்டா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்தாா். பாஜகவுக்கான தமிழக பொறுப்பாளா் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மூத்த தலைவா் ஹெச்.ராஜா, முன்னாள் மாநில தலைவா்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மகளிரணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல், கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து தோ்தல் பணியாற்றுவது குறித்து ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணியை விரிவுபடுத்துவது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகன், மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், பொருளாளா் எஸ்.ஆா்.சேகா், தேசிய பொதுக்குழு உறுப்பினா் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்... மேலும் பார்க்க

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப் பண... மேலும் பார்க்க

நாளை பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) ... மேலும் பார்க்க

சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு

சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிா்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த்தொற்று எனும் கடினமான காலத்தில் மே 7-... மேலும் பார்க்க

சித்ரா பெளா்ணமி: திருவண்ணாமலைக்கு 5,932 சிறப்பு பேருந்துகள்

சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை (மே 11, 12) 5,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய... மேலும் பார்க்க