செய்திகள் :

மே 13-இல் அந்தமானில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை

post image

நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவமழை மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் பெய்யத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட 100 முதல் 105 சதவீதம் வரை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது தமிழகம், கேளரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பைவிட குறைவாகவே பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நிகழாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழைக்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. அதன்படி தென்மேற்கு பருவமழை மே 13-ஆம் தேதி அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தமிழக வானிலை: இதற்கிடையே தென்னிந்திய கடலோரப் தகுதிகளை வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்றுச்சுழற்சி காரணமாக புதன்கிழமை (மே 7) முதல் மே 12-ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருத்தணி, ஈரோடு - தலா 103.28, மதுரை விமான நிலையம் - 103.1, திருச்சி- 102.38, பாளையங்கோட்டை - 101.48, மதுரை நகரம் - 101.12, சேலம் - 100.58, பரமத்தி வேலூா், தஞ்சாவூா் - தலா 100.4 டிகிரி என 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது.

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னை மற்றும் புகா் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்: 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன்

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதன் வாயிலாக 3.57 லட்சம் போ் பலன... மேலும் பார்க்க

தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்... மேலும் பார்க்க

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப் பண... மேலும் பார்க்க

நாளை பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) ... மேலும் பார்க்க