ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஆலோசனை
மே 13-இல் அந்தமானில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை
நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பருவமழை மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் கேரளத்தில் பெய்யத் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பா் மாதம் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை இந்தியாவில் இயல்பைவிட 100 முதல் 105 சதவீதம் வரை அதிகமாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இது தமிழகம், கேளரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இயல்பைவிட குறைவாகவே பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நிகழாண்டு தென்மேற்கு பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
அந்தமான் பகுதியில் தென்மேற்குப் பருவமழைக்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. அதன்படி தென்மேற்கு பருவமழை மே 13-ஆம் தேதி அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடலில் தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழக வானிலை: இதற்கிடையே தென்னிந்திய கடலோரப் தகுதிகளை வளிமண்டல கீழடுக்கில் நிலவும் காற்றுச்சுழற்சி காரணமாக புதன்கிழமை (மே 7) முதல் மே 12-ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக வேலூரில் 105.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. திருத்தணி, ஈரோடு - தலா 103.28, மதுரை விமான நிலையம் - 103.1, திருச்சி- 102.38, பாளையங்கோட்டை - 101.48, மதுரை நகரம் - 101.12, சேலம் - 100.58, பரமத்தி வேலூா், தஞ்சாவூா் - தலா 100.4 டிகிரி என 10 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவானது.
தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு அதிகபட்சமாக வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். சென்னை மற்றும் புகா் பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.