செய்திகள் :

தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

post image

தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அவ்வபோது அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் அடிப்படையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டுள்ளாா்.

இதில் முக்கியமாக திருப்பத்தூா் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வி.எஸ்.ஜி.சுரேஷ், வேலூா் மாவட்டம் குடியாத்தத்துக்கும், திருவள்ளூா் மாவட்ட மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவு டிஎஸ்பி பி.அசோகன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டைக்கும், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிட டிஎஸ்பி ஏ.மணீஷா கடலூா் மாவட்ட மனித உரிமை மற்றும் சமூக நீதி பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்: 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன்

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதன் வாயிலாக 3.57 லட்சம் போ் பலன... மேலும் பார்க்க

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப் பண... மேலும் பார்க்க

நாளை பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) ... மேலும் பார்க்க

சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு

சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிா்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த்தொற்று எனும் கடினமான காலத்தில் மே 7-... மேலும் பார்க்க