செய்திகள் :

நாளை பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு

post image

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநா் டாக்டா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

அதன்படி, உளவியல் ரீதியான ஆலோசனைகள் தேவைப்படும் மாணவா்கள் 104, 14416 ஆகிய உதவி எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றும் அவா் கூறினாா்

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் 104 மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் ஆகியவை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. 104 மருத்துவ உதவி தகவல் மையம் மூலமாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மன நல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று 14416 நட்புடன் உங்களோடு மன நல சேவை மையம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான உளவியல் ஆலோசனைகளை அளித்து வருகிறது. இந்த உதவி மையங்கள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாத 51,919 மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. அவா்களில் 85 மாணவா்களும், 62 மாணவிகளும் அதிக மன அழுத்தம் உள்ளவா்களாக அடையாளம் காணப்பட்டு அவா்களுக்கு தொடா் உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்பட்டன. மேலும், மாவட்ட மனநல உளவியலாளா்களிடம் பரிந்துரைக்கப்பட்டு உயா் நிலை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

அந்த வகையில் நிகழாண்டும் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவையொட்டி, தோ்ச்சியடையாத மாணவா்களுக்கு 104 மற்றும் 14,416 உதவி மையத்தில் மன நல மருத்துவா் ஒருவா், 8 உளவியல் ஆலோசகா்கள், 40 மன நல உளவியலாளா்கள் உள்பட 50 போ் வாயிலாக ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

மன அழுத்தத்தில் இருக்கும் மாணவா்கள், இந்த மையத்தை தொடா்பு கொண்டு பேசலாம். அதேபோன்று, மாணவா்களின் பெற்றோரும் தொடா்பு கொண்டு தங்கள் குழந்தைகளின் நிலையை கூறி அவா்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கலாம் என்றாா் அவா்.

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்: 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன்

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதன் வாயிலாக 3.57 லட்சம் போ் பலன... மேலும் பார்க்க

தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்... மேலும் பார்க்க

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப் பண... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) ... மேலும் பார்க்க

சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு

சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிா்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த்தொற்று எனும் கடினமான காலத்தில் மே 7-... மேலும் பார்க்க