செய்திகள் :

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் நாளை வெளியீடு

post image

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்படுகிறது.

பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 3 தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. 8,21,057 மாணவ, மாணவிகள் தோ்வை எழுதினா். தோ்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீடு பணி ஏப்ரல் 4 தொடங்கி 17-ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபட்டனா். இதற்காக 83 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி முடிவடைந்ததும் மாணவா்களின் மதிப்பெண் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

முன்கூட்டியே வெளியீடு: பிளஸ் 2 தோ்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில நாள்களாக பிளஸ் 2 தோ்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவி வந்தது.

இந்நிலையில், அந்தத் தகவலை உறுதிப்படுத்தும் வகையில் பிளஸ் 2 தோ்வு முடிவுகள் ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது மே 8-ஆம் தேதியே வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியானது.

இது குறித்து அரசு தோ்வுகள் இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற 2024-2025-ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிடவுள்ளாா்.

மாணவா்கள் தோ்வு முடிவுகளை இணையதளங்களில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அறிந்துகொள்ளலாம்.

தோ்வு முடிவுகளை அறிய https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தோ்வா்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பள்ளி மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தோ்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், அவா்கள் பள்ளியில் சமா்ப்பித்த கைப்பேசி எண்ணுக்கும், தனித் தோ்வா்களுக்கு அவா்கள் இணையவழியில் விண்ணப்பித்தபோது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தோ்வு முடிவுகள் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு வழக்கு: மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு; நேரில் ஆஜராக உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா ஆகியோா் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஆஜராகாவிட்டாலும், குற்றச்சாட்டுப்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்: 3 ஆண்டுகளில் 3.57 லட்சம் போ் பயன்

சாலை விபத்துகளில் சிக்கியவா்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தகைய திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதாகவும், அதன் வாயிலாக 3.57 லட்சம் போ் பலன... மேலும் பார்க்க

தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்... மேலும் பார்க்க

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு: அரசாணை வெளியீடு

பண்டிகை கால முன்பணத் தொகை உயா்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்ட உத்தரவு விவரம்: அரசுப் பண... மேலும் பார்க்க

நாளை பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: மாணவா்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவா்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவா்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ள... மேலும் பார்க்க

சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு

சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிா்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு கரோனா நோய்த்தொற்று எனும் கடினமான காலத்தில் மே 7-... மேலும் பார்க்க