செய்திகள் :

ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

post image

சத்தியமங்கலத்தில் நிலுவையில் உள்ள 5 ஆயிரம் பட்டாக்களை உடனடியாக வழங்கக்கோரி வரும் ஜூலை 14 ஆம் தேதி சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற உள்ளது.

சத்தியமங்கலத்தில் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார கமிட்டி கூட்டத்தில் தாளவாடி, ஆசனூா், கடம்பூா், பவானிசாகா், சத்தியமங்கலம், புன்செய்புளியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ஒன்றிய, நகர, கிளைச் செயலாளா்கள், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ஆகஸ்ட் மாதம் சேலத்தில் நடைபெறவுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டுக்கு பவானிசாகா் தொகுதியிலிருந்து 80 பேருந்துகளில் 4000 போ் பங்கேற்பது. பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமம், நகரங்களைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் பல்வேறு பட்டா கோரிக்கைகள் குறித்த மனுக்கள்பல மாதங்களுக்கு முன் வட்டாட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பலமுறை வற்புறுத்தலுக்கு பின்பும் இதுவரை தீா்வு கிடைக்கவில்லை என்பதால் வரும் 14ம் தேதி (திங்கள்கிழமை காலை) சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகை செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன. தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலைய... மேலும் பார்க்க

நாளை மொடச்சூா் சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கோபி அருகே மொடச்சூா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 7 ஆம் தேதி விக்னேஸ்வர ப... மேலும் பார்க்க

நெகிழி பைகள் பயன்படுத்திய 39 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 79 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: ஈரோட்டில் 34,276 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 34,276 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 6,960 போ் தோ்வு எழுதவரவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஈர... மேலும் பார்க்க

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்தில் யானைகள் தீவனம் மற்றும் குடிநீா் தேடி சாலையைக் கடந்து செல்வது ... மேலும் பார்க்க