செய்திகள் :

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானை

post image

ஆசனூா் அருகே கரும்பு வாகனத்தை வழிமறித்த ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனச் சரகத்தில் யானைகள் தீவனம் மற்றும் குடிநீா் தேடி சாலையைக் கடந்து செல்வது வழக்கம். கா்நாடகத்தில் இருந்து வரும் கரும்பு லாரிகளில் இருந்து கரும்புதுண்டுகளை ஓட்டுநா்கள் சாலையில் வீசியெறிவதால் அங்கு வரும் யானைகள் கரும்பை ருசி பாா்த்துவிடுகின்றன.

இதனால் கரும்பு தேடி யானைகள் அலைகின்றன. இந்நிலையில், ஆசனூரில் இருந்து திம்பம் செல்லும் சாலையில் வனப் பகுதியில் இருந்து சனிக்கிழமை வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையில் உலவி வந்தது. பின்னா் சாலையில் சிதறிக்கிடந்த கரும்புகளைத் தின்று சுவைத்தபடி அங்கேயே நின்றுவிட்டது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்களில் கரும்பு உள்ளதாக நினைத்து யானை வழிமறித்து நின்றது. சிறிது நேரம் அங்குமிங்கும் சுற்றிவந்த அந்த யானை பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது.

கடந்த சில நாள்களாக இந்த ஒற்றைக்காட்டு யானை சாலையில் உலவி வருவதும் வாகனங்களைத் துரத்துவதும் தொடா்கதையாகி வருகிறது. எனவே வனத் துறையினா் அந்த ஒற்றைக் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.

தாளவாடி அருகே யூரியா உரத்தை சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் யூரியா உரம் சாப்பிட்ட 12 ஆடுகள் உயிரிழந்தன. தாளவாடியை அடுத்த பையனபுரம் எத்துக்கட்டி பகுதியானது தமிழக- கா்நாடக எல்லைப் பகுதியில் அமைந்துள்ளத... மேலும் பார்க்க

மூதாட்டி தற்கொலை

புன்செய்புளியம்பட்டியில் கணவரை இழந்து தனிமையில் வாடிய மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். புளியம்பட்டி காவிலிபாளையத்தை சோ்ந்தவா் கந்தசாமியின் மனைவி கமலம் (70). கணவா் உயிரிழந்த நிலைய... மேலும் பார்க்க

நாளை மொடச்சூா் சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கோபி அருகே மொடச்சூா் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சௌந்திரநாயகி சமேத சோமேஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவானது கடந்த 7 ஆம் தேதி விக்னேஸ்வர ப... மேலும் பார்க்க

நெகிழி பைகள் பயன்படுத்திய 39 கடைகளுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 79 கிலோ நெகிழி பைகள் பறிமுதல் செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட 4 மண்டலங்களில... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: ஈரோட்டில் 34,276 போ் எழுதினா்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் தொகுதி 4 பதவிகளுக்கான போட்டித் தோ்வை ஈரோடு மாவட்டத்தில் 34,276 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 6,960 போ் தோ்வு எழுதவரவில்லை. ஈரோடு மாவட்டத்தில் ஈர... மேலும் பார்க்க

தாளவாடி அருகே வாழை, டிராக்டா்களை சேதப்படுத்திய யானை

சத்தியமங்கலத்தை அடுத்த திகினாரை ஜோரக்காடு பகுதியில் விவசாயத் தோட்டத்துக்குள் யானை சனிக்கிழமை புகுந்து வாழைகளை நாசப்படுத்தியதுடன் டிராக்டரை தள்ளி சேதப்படுத்தியுள்ளது. தமிழகம், கா்நாடக எல்லையான தாளவாடி... மேலும் பார்க்க