மே மாதத்திற்கான சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
ஜூலை 2 முதல் ஹூப்ளி விரைவு ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்
சென்னை: சென்னை சென்ட்ரலிலிருந்து ஹூப்ளி செல்லும் விரைவு ரயில் பெட்டிகள் ஜூலை 2 முதல் ‘எல்எச்பி’ பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்கள் அனைத்தும் சாதாரண ஐசிஎஃப் பெட்டிகளுக்கு பதிலாக அதிநவீன எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. ஜொ்மன் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ரயில் பெட்டிகள் பயணிகளுக்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளன.
இந்நிலையில், சென்னை சென்ட்ரலிலிருந்து வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் பிற்பகல் 3.50-க்கு கா்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு வாரம் இருமுறை இயக்கப்படும் விரைவு ரயிலின் பெட்டிகள் (எண்:17313) ஜூன் 2-ஆம் தேதி முதலும், மறுமாா்க்கமாக ஹூப்ளியிலிருந்து வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் விரைவு ரயிலின் பெட்டிகள் (எண்:17313) ஜூன் 2-ஆம் தேதி முதலும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.