செய்திகள் :

ஜெர்மனியில் 3வது நாளாகத் தொடர்ந்து எரியும் காட்டுத் தீ! மக்கள் வெளியேற்றம்!

post image

ஜெர்மனி நாட்டின் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அங்கு வசிக்கும் 100-க்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் கிழக்கு திசையில் அமைந்துள்ள, சாக்ஸோனி மற்றும் பிராண்டென்பர்க் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லையில், கடந்த ஜூலை 1 ஆம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயானது தொடர்ந்து பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்தக் காட்டுத் தீயை அணைக்கும் பணியில், சுமார் 500-க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மூன்றாவது நாளாக இன்று (ஜூலை 3) ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 2 வீரர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காட்டுத் தீயானது, நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை எரித்து நாசமாக்கியுள்ளது. இதையடுத்து, அப்பகுதியிலுள்ள தீப்பிழம்புகளைக் கண்டறியும் பணியில் சிறப்பு கேமராக்கள் பொறுத்திய ஹெலிகாப்டர்களின் உதவியுடன் அந்நாட்டு காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரையில், கட்டுப்படுத்த முடியாத அந்தக் காட்டுத் தீ, தற்போது அங்குள்ள முன்னாள் ராணுவப் பயிற்சி முகாமின் அருகில் நெருங்கியுள்ளதால், அங்குள்ள வெடிமருந்துகள் வெடிக்கும் அபாயமுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியில் அமைந்துள்ள ஹெய்டௌசர், நியூடோர்ஃப் மற்றும் லிச்டெசி ஆகிய கிராமங்களில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாள்களாக, ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் வறண்ட வானிலையாலும், அதிகரித்து வரும் வெப்பத்தாலும் பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More than 100 people have been evacuated from their homes due to forest fires in eastern Germany.

இதையும் படிக்க: பாக். சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு! 2 நாள்களில் 50 பேர் கைது!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரிக் குறைப்பு மசோதா நிறைவேற்றம்! இந்தியர்களுக்கு என்ன பயன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிக் குறைப்பு மசோதா பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் (செனட்) வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.வரிச் சலுகைகள், எல்லைப் பாதுகாப்பு, செலவீன... மேலும் பார்க்க

500% வரி விதிக்கும் மசோதா: அமெரிக்காவிடம் இந்தியா கவலை - ஜெய்சங்கா்

‘ரஷியாவிடம் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கும் மசோதா குறித்து அமெரிக்காவிடம் தனது கவலையை இந்தியா பதிவு செய்துள்ளது’ என்று வெளியுறவு அமைச்சா் ஜெய்சங... மேலும் பார்க்க

இராக்: ஆயுதங்களை ஒப்படைக்கும் குா்து கிளா்ச்சியாளா்கள்

துருக்கி அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே), வடக்கு இராக்கில் தங்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

ஜப்பானில் நிலநடுக்கம்

ஜப்பானில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் க்யுஷு பிராந்தியத்தின் அகுசெகி தீவுக்கு அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவானது. இதில் அந்தத் தீவு குலுங்க... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 94 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை காலை வரை நடத்திய தாக்குதல்களில் உணவுப் பொருள்களுக்காக காத்திருந்தவா்கள் உள்பட 94 போ் உயிரிழந்தனா். மத்திய காஸாவின் நெட்ஸாரிம் பகுதிக்கு அருகே நிவார... மேலும் பார்க்க

இந்தோனேசியா: படகு விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 28 போ் மாயம்

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு சென்று கொண்டிருந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்; 30 போ் கடலில் மாயமாகியுள்ளனா். இது குறித்து என்று மீட்புக் குழு அத... மேலும் பார்க்க