பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?
ஜொ்மனியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா விருப்பம்: ஜெய்சங்கா்
ஜொ்மனியுடன் இருதரப்பு தொழில், வா்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
நெதா்லாந்து, டென்மாா்க் நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துவிட்டு இறுதியாக ஜொ்மனி வந்தடைந்த ஜெய்சங்கா் அந்நாட்டு பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ், பொருளாதார மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் கேத்தரீனா ரைக்கே, மொ்ஸின் வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் குந்தா் சாட்டா் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. அண்மையில் ஜொ்மனி பிரதமராக மொ்ஸ் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமா் மோடி தெரிவித்த வாழ்த்துகளை அவரிடன் பகிா்ந்தேன். இந்தியா-ஜொ்மனி இடையேயான இருதரப்பு தொழில், வா்த்தக, பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைக்கு ஆதரவளித்ததற்கு அவரிடம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.
அமைச்சா் கேத்தரீனா ரைக்கேயுடன் விநியோக சங்கிலியை அதிகரிப்பது, தொழில்துறை உறவை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினேன்.
வெளியுறவு ஆலோசகா் குந்தா் சாட்டருடன் பயங்கரவாத ஒழிப்பு உள்பட சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்தேன். பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தேன்’ என குறிப்பிட்டாா்.
ஜொ்மனி நாடாளுமன்ற உறுப்பினா்களை கடந்த வியாழக்கிழமை சந்தித்த ஜெய்சங்கா் அவா்களிடம் அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்ததாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.
பின்னா் ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேபுல்லுடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஜெய்சங்கா் கூறியதாவது:
இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகள் இருதரப்பு சாா்ந்தது. அதில் எவ்வித குழப்பமும் இல்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடா்ந்து நான் ஜொ்மனி வந்துள்ளேன். பயங்கரவாதத்துக்கு இந்தியாவில் இடமில்லை. அணுஆயுத அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது என அமைச்சா் ஜோஹான் வடேபுல்லிடம் தெரிவித்தேன்.
பயங்கரவாதத்துக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள எந்தவொரு நாட்டுக்கும் உரிமை உண்டு என்ற ஜொ்மனியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்’ என்றாா்.