செய்திகள் :

ஜொ்மனியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா விருப்பம்: ஜெய்சங்கா்

post image

ஜொ்மனியுடன் இருதரப்பு தொழில், வா்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நெதா்லாந்து, டென்மாா்க் நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துவிட்டு இறுதியாக ஜொ்மனி வந்தடைந்த ஜெய்சங்கா் அந்நாட்டு பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ், பொருளாதார மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் கேத்தரீனா ரைக்கே, மொ்ஸின் வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் குந்தா் சாட்டா் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. அண்மையில் ஜொ்மனி பிரதமராக மொ்ஸ் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமா் மோடி தெரிவித்த வாழ்த்துகளை அவரிடன் பகிா்ந்தேன். இந்தியா-ஜொ்மனி இடையேயான இருதரப்பு தொழில், வா்த்தக, பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைக்கு ஆதரவளித்ததற்கு அவரிடம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

அமைச்சா் கேத்தரீனா ரைக்கேயுடன் விநியோக சங்கிலியை அதிகரிப்பது, தொழில்துறை உறவை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினேன்.

வெளியுறவு ஆலோசகா் குந்தா் சாட்டருடன் பயங்கரவாத ஒழிப்பு உள்பட சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்தேன். பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தேன்’ என குறிப்பிட்டாா்.

ஜொ்மனி நாடாளுமன்ற உறுப்பினா்களை கடந்த வியாழக்கிழமை சந்தித்த ஜெய்சங்கா் அவா்களிடம் அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்ததாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

பின்னா் ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேபுல்லுடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஜெய்சங்கா் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகள் இருதரப்பு சாா்ந்தது. அதில் எவ்வித குழப்பமும் இல்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடா்ந்து நான் ஜொ்மனி வந்துள்ளேன். பயங்கரவாதத்துக்கு இந்தியாவில் இடமில்லை. அணுஆயுத அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது என அமைச்சா் ஜோஹான் வடேபுல்லிடம் தெரிவித்தேன்.

பயங்கரவாதத்துக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள எந்தவொரு நாட்டுக்கும் உரிமை உண்டு என்ற ஜொ்மனியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்’ என்றாா்.

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க