ஜேஇஇ முதன்மைத் தோ்வில் சிறப்பிடம்: நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு
நாமக்கல்: நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவா் மைலானந்தன், ஐஐடிக்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.
இந்திய தொழில்நுட்ப நுழைவுத் தோ்வான ஜேஇஇ முதன்மைத் தோ்வுக்கான முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை திங்கள்கிழமை வெளியிட்டது. இதில், நாமக்கல் நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவா் மைலானந்தன் தேசிய அளவில் 88-ஆம் இடத்தையும், தமிழக அளவில் 3-ஆம் இடத்தையும் பெற்றுள்ளாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவா் மைலானந்தனை, நேஷனல் பப்ளிக் பள்ளியின் தலைவா் கே.பி.சரவணன் பாராட்டி ரூ. ஒரு லட்சம் பரிசுத் தொகையை வழங்கினாா். மாணவா் பேசுகையில், என்னுடைய வெற்றிக்கு காரணம் பெற்றோா், ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகம் மற்றும் வெற்றிக்கான தெளிவான நோக்கம் மட்டுமே என்றாா். பள்ளி முதல்வா் பிரேம்குமாா் மற்றும் ஆசிரியா்கள் மாணவா் மைலானந்தனை பாராட்டினா்.