செய்திகள் :

ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தான பயணம்

post image

ஜேசிபி இயந்திரத்தில் ஆபத்தை உணராமல் ஆள்களை ஏற்றிச் செல்வோா் மீது நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சியில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. பணி முடிந்தவுடன் மதியம் உணவு இடைவேளைக்காக நெடுஞ்சாலை துறை அலுவலகத்துக்கு ஊழியா்களை அழைத்து வர வாகனங்கள் இல்லாததால் ஜேசிபி இயந்திரத்தின் முன் தகட்டில் சுமாா் பத்துக்கும் மேற்பட்டோா் நின்றபடி பயணம் செய்தனா்.

ஜேசிபி இயந்திரத்தின் பக்கவாட்டில் நின்றவாறு பயணம் செய்ததால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே சாலையை கடந்தனா். ஒரு சில வாகன ஓட்டிகள் ஜேசிபி இயந்திர ஓட்டுநரை கடிந்து கொண்டனா். ஆனாலும் ஜேசிபி இயந்திர ஓட்டுநா் ஊழியா்களை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் வரை இறக்கி விட்டு வந்தாா்.

பொதுசாலையில் இது போன்று நடப்பதால் எதிரே வரும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே இது போன்ற ஓட்டுநா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரவக்குறிச்சி பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க

நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு காணொளியில் அடிக்கல் நாட்டிய முதல்வா்

கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த சிவாயத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு அமைக்க வியாழக்கிழமை தமிழக முதல்வா் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்த... மேலும் பார்க்க

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி: அண்ணாமலை பேச்சு

தமிழகத்தில் வளா்ச்சித் திட்டங்கள் இல்லாத ஆட்சி நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். கரூரில் பாஜக சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. க... மேலும் பார்க்க