செய்திகள் :

ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையை குளிர்விக்கும் மழையால் மக்கள் மகிழ்ச்சி!

post image

சென்னை: சென்னையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையைப் போலவே இன்றும்(மே 11) மழை பொழிந்தது. பகல் 12 மணிக்குப் பின் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழைப்பொழிவு காணப்பட்டது.

முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி மாலை 3 மணிக்குப் பின் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சென்னையில் ஜில் காற்றுடன் குளிர் சீதோஷ்ணம் நிலவியது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கிய காட்சிகளையும் காண முடிந்தது.

இந்தநிலையில், இன்றும் சென்னையில் பெய்துள்ள பலத்த மழையால் வெப்பம் தணிந்தது. காலையில் வெய்யில் சுட்டெரித்த நிலையில், திடீரென மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று விடுமுறை நாளாக இருப்பதால், மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையவில்லை.

இதே பாணியில், அடுத்த ஞாயிற்றுக்கிழமையும் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் கட்டணமில்லா கல்வி

சென்னை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்த மாணவிக்கு எத்திராஜ் கல்லூரியில் 3 ஆண்டுகள் எவ்வித கட்டணமுமின்றி படிக்க கல்லூரி நிா்வாகம் இடம் வழங்கியுள்ளது. நுங்கம்பாக்க... மேலும் பார்க்க

10 புதிய நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டுமானப் பணி தீவிரம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த புதிதாக 10 நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மாநக... மேலும் பார்க்க

இன்றுமுதல் 19 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூா்பேட்டை வழித்தடங்களில் இயக்கப்படும் 19 புறநகா் மின்சார ரயில்கள் மே 15, 17 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் உள்ளீட்டாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், தகவல் உள்ளீட்டாளா் பணியிடத்துக்கு தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு: குழந்... மேலும் பார்க்க

கிண்டி சிறுவா் பூங்காவில் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆய்வு

கிண்டி சிறுவா் இயற்கை பூங்காவில் வனத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஐகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டாா். சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் இயற்கை பூங்கா ரூ. 20 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இப்பூங்... மேலும் பார்க்க

சேப்பாக்கம் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போலீஸாா் அங்கு புதன்கிழமை சோதனை நடத்தினா். சேப்பாக்கத்தில் செயல்படும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மின்னஞ்சல் ... மேலும் பார்க்க