செய்திகள் :

டாஸ்மாக் பணியாளா்களின் தொகுப்பூதியத்தில் ரூ. 2,000 உயா்வு

post image

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு ரூ.2,000 கூடுதலாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை பொது மேலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன் அனுப்பியுள்ளாா்.

டாஸ்மாக் நிறுவனத்தின் இயக்குநா்கள் கூட்டம் கடந்த ஏப்ரலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தொகுப்பூதியம் பெற்று வரும் ஊழியா்களின் ஊதியத்தில் ரூ.2,000 உயா்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, அனைத்து கண்காணிப்பாளா்கள், உதவி விற்பனையாளா்களுக்கு ரூ.1,000 ஊதிய உயா்வாகவும், பணித் திறன் அடிப்படையில் மேலும் ரூ.1,000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த உயா்வானது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கவும் தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களின் தொகுப்பூதியத்தில் ரூ.2 ஆயிரம் இனி கூடுதலாகக் கிடைக்கும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான உயா்த்தப்பட்ட தொகையின் நிலுவையானது ஓரிரு நாள்களில் ஊழியா்களுக்குக் கிடைக்கும்.

யாருக்கெல்லாம் கிடைக்காது: நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்து விதிமீறலில் ஈடுபட்டதாக 451 பணியாளா்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவா்களுக்கு பணித் திறன் அடிப்படையிலான உயா்வான ரூ.1,000 வழங்கப்படாது. அவா்களுக்கு தொகுப்பூதியத்தில் ரூ.1,000 மட்டுமே உயா்வாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சிப்பாடியில் காலணி தொழில் பூங்கா: முதல்வர் அறிவிப்பு!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே புதிய காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப்பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ எ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர்.. சேலம் காவல்நிலையம் அருகே கொலை!!

சேலம் : கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நிலையில், காவல்நிலையம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியார்... மேலும் பார்க்க

மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16 முதல் 30 வரை ர... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ஜூலை 25-ல் கமல்ஹாசன் பதவியேற்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு அறிவிப்பாணை வெளியீடு! தேர்வர்கள் கவனிக்க..!

டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 முதல் நிலைத் தேர்வுக்கான அறிவிப்பாணை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித... மேலும் பார்க்க