செய்திகள் :

900 எபிசோடுகளுடன் நிறைவடைந்த செவ்வந்தி தொடர்!

post image

நடிகை திவ்யா ஸ்ரீதர் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்த செவ்வந்தி தொடர் 900 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'செவ்வந்தி' தொடர், கணவனை இழந்த பெண்(செவ்வந்தி) வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் மற்றும் சவால்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்தது.

ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த தொடராகவும், டிஆர்பியில் முன்னணியிலும் இத்தொடர் இருந்து வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இத்தொடர், பரபரப்பான இறுதிக்கட்டக் காட்சிகளுடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி நிறைவடைந்தது.

இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பகல் 11 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு, 900 எபிசோடுகளுடன் கடந்த சனிக்கிழமை நிறைவடைந்தது.

செவ்வந்தி தொடர் நிறைவடைந்ததால், இத்தொடர் ஒளிபரப்பான நேரத்தில் நந்தினி தொடர் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழலில் ஒரு தொடர் ஆரம்பிக்கப்பட்டு குறுகிய காலத்தில் முடிக்கப்படும் நிலையில், செவ்வந்தி தொடர் 3 ஆண்டுகளுக்கு மேல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பானது, இத்தொடருக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

விக்ரமின் அடுத்த படம் இதுதான்!

நடிகர் விக்ரம் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் வீர தீர சூரன் - 2 படத்தைத் தொடர்ந்து மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், படத்த... மேலும் பார்க்க

ஓவல் அலுவலகத்தில் கிளப் உலகக் கோப்பை..? புதிய சர்ச்சையில் டிரம்ப்!

ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ஓவல் அலுவலத்திலேயே வைத்துக்கொள்வேன் எனக் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற கிளப் உலகக் கோப்பை போட்டியில் ... மேலும் பார்க்க

நடிகை பூஜிதாவுக்கு குவியும் வாழ்த்து!

தொகுப்பாளினி பூஜிதா தேவராஜ் இன்று(ஜூலை 15) தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் சின்ன திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்திரா சுப்ரமணியன் இயக்கத... மேலும் பார்க்க

படை தலைவன் ஓடிடி தேதி!

நடிகர் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்திருந்தார். இளையராஜா இசையமைப்பில் உருவா... மேலும் பார்க்க

திருமணத்துக்குப் பிறகு கணவரின் பிறந்த நாளைக் கொண்டாடிய பாவனி!

சின்ன திரை நடிகை பாவனி, திருமணத்துக்குப் பிறகான தனது கணவரின் முதல் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். இதனையொட்டி உணர்வுப்பூர்வமாக அவர் பதிவிட்டுள்ளார்.திருமணத்துக்கு முன்பு காதலர்களாக பல பிறந்த... மேலும் பார்க்க

பழம்பெரும் பாலிவுட் நடிகர் தீரஜ் குமார் காலமானார்!

பழம்பெரும் பாலிவுட் நடிகரும், இயக்குநரும் மற்றும் தயாரிப்பாளருமான தீரஜ் குமார் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பழம்பெரும் பாலிவுட் மற்றும் பஞ்சாபி மொழி நடிகரும் தயாரிப்பாளருமான தீரஜ் குமார் (வயது 79)... மேலும் பார்க்க