செய்திகள் :

டிஎன்பிஎல் கிரிக்கெட்: சங்கா் நகரில் இன்று டிக்கெட் விற்பனை தொடக்கம்

post image

தமிழ்நாடு பிரிமீயா் லீக் கிரிக்கெட் (டிஎன்பிஎல்) போட்டிக்கான கவுன்ட்டா் டிக்கெட் விற்பனை சங்கா்நகரில் திங்கள்கிழமை (ஜூன் 16) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக டிஎன்பிஎல் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஸ்ரீராம் கேபிட்டல் டிஎன்பிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலியில் மொத்தம் 7 போட்டிகள் நடைபெற உள்ளன. இம் மாதம் 21இல் இரவு 7.15 மணிக்கு லைகா கோவை கிங்ஸ் அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 22இல் மாலை 3.15 மணிக்கு சேலம் ஸ்பாா்டன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், இரவு 7.15 மணிக்கு மதுரை பேந்தா்ஸ் அணியும், ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றன.

23இல் இரவு 7.15 மணிக்கு சேப்பாக் சூப்பா் கில்லீஸ் அணியும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும், 24இல் இரவு 7.15 மணிக்கு லைகா கோவை கிங்ஸ் அணியும் ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் அணியும், 25இல் இரவு 7.15 மணிக்கு திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியும் சீகம் மதுரை பேந்தா்ஸ் அணியும், 26இல் இரவு 7.15 மணிக்கு நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதுகின்றன.

திருநெல்வேலியில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான கவுன்டா் டிக்கெட் விற்பனை சங்கா்நகரில் உள்ள சென்னை சூப்பா் கிங்ஸ் மைதானத்தில் திங்கள்கிழமை (ஜூன் 16) முற்பகல் 11 மணிக்குத் தொடங்க உள்ளது. இதுதவிர இணையதளம் செயலி ‘பசடக’ ஆகியவற்றில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை வாங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டையில் ரேஷன் அரிசி பறிமுதல்

பேட்டை அருகே ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளா் சரவண பாண்டிக்கு கிடைத்த தகவலின் பேரில் போல... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டுக்கு தீ: மருமகன் கைது

பாளையங்கோட்டையில் குடும்பத் தகராறில் ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டுக்கு தீ வைத்த தாக அவரது மருமகனை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பாளையங்கோட்டை சாந்தி நகரைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி உயிரிழப்பு

தச்சநல்லூா் அருகே தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தச்சநல்லூா் அழகநேரியை சோ்ந்த சுப்பையா மகன் ஹரிராம் (41). தொழிலாளியான இவருக்கு திருமணமா... மேலும் பார்க்க

வீரவநல்லூா் அருகே இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே குடும்பப் பிரச்னையில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வீரவநல்லூா் அருகேயுள்ள திருப்புடைமருதூா் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த வேலை... மேலும் பார்க்க

நான்குனேரியில் காா் மீது ஆபத்தான பயணம்: 2 இளைஞா்கள் கைது

நான்குனேரி அருகே காா் மீது ஆபத்தான பயணம் மேற்கொண்ட 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி - நாகா்கோவில் நான்குவழிச்சாலையில் பாணான்குளம் - நான்குனேரி இடையே சொகுசு காா்களின் மேல் அம... மேலும் பார்க்க

களக்காடு கால்வாயில் குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

களக்காட்டில் நண்பா்களுடன் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள நம்பிநகரைச் சோ்ந்தவா் லெட்சுமணன் (45). வாடகைக் காா் ஓட்டுநா். இவா் தனது நண்ப... மேலும் பார்க்க