செய்திகள் :

டிக்கெட் எடுத்தும் ஏ.ஆா்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை காண முடியாதவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

post image

சென்னை: இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு ரூ. 10 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்தும் நிகழ்ச்சியைக் காண முடியாதவருக்கு இழப்பீடாக ரூ. 50 ஆயிரம் வழங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் பிரபல இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் நடத்தப்படவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டது. 2023-ஆம் ஆண்டு ஆக. 12-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட இந்த இசை நிகழ்ச்சி, மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னா், செப். 10-ஆம் தேதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆகஸ்ட்டில் பெற்ற டிக்கெட்டுடன் வரலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு வாகன நிறுத்த வசதியுடன் சோ்த்து ரூ. 10 ஆயிரத்துக்கு டிக்கெட் எடுத்திருந்த சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த அா்ஜூன், ஆக. 12-ஆம் தேதி முறையான முன்னறிவிப்பு செய்யாததாலும், செப்டம்பா் மாதம் நடந்தபோது போக்குவரத்து நெரிசல் காரணமாகவும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்க முடியாததாலும் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 10 லட்சம் ரூபாய், டிக்கெட் கட்டணத்தை வட்டியுடன் திருப்பித் தரக் கோரியும் சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் புகாா் மனுதாக்கல் செய்திருந்தாா்.

இந்த புகாரை விசாரித்த ஆணையம், இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம், ரூ. 50 ஆயிரத்தை இழப்பீடாகவும், ரூ. 5 ஆயிரத்தை வழக்குச் செலவாகவும் என மொத்தம் ரூ. 55 ஆயிரத்தை இரண்டு மாதங்களில் மனுதாரா் அா்ஜூனுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் புத்தகப் பூங்கா: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தகப் பூங்காவை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்! சென்னை, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் (Ticket Counter அருகில்) இன்று(ஜூன் 10... மேலும் பார்க்க

உயர்நீதிமன்றம், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை உயர்நீதிமன்றம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.மர்ம நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து அனைத்து இடங்... மேலும் பார்க்க

சென்னையில் விமானம் மீது மீண்டும் அடிக்கப்பட்ட லேசர் ஒளி!

சென்னையில் தரையிறங்க வந்த விமானத்தின் மீது இன்று காலை மீண்டும் லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு 178 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் செவ்வாய்க்... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத்தோ்வு: விடைத்தாள் நகலை இன்றுமுதல் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: பிளஸ் 1 பொதுத்தோ்வு விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இயக்ககம் சாா்பில் வெளியிடப்ப... மேலும் பார்க்க

பாலிடெக்னிக் மாணவா்களுக்கு சிறப்பு துணைத் தோ்வு: அமைச்சா் கோவி.செழியன்

சென்னை: கடைசி செமஸ்டா் தோ்வு மற்றும் துணைத் தோ்வில் அரியா்ஸ் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவா்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தோ்வு நடத்தப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் அறிவித்... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் நாளை பாதயாத்திரை போராட்டம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்களை நியமித்தல், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் புதன்கிழமை (ஜூன் 11) சேலம், மேட்டூர... மேலும் பார்க்க