செய்திகள் :

டியுஎஸ்யு தோ்தல் பிரசாரத்தின்போது ஏபிவிபி, என்எஸ்யுஐ அமைப்பினா் மோதல்

post image

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) தோ்தல் பிரசாரத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை, தில்லி பல்கலைக்கழகத்தின் கிரோரி மால் கல்லூரியில் (கேஎம்சி) என்எஸ்யுஐ மற்றும் ஏபிவிபி மாணவா் குழுக்களைச் சோ்ந்தவா்கள் மோதிக்கொண்டனா்.

என்எஸ்யுஐ வேட்பாளா்களுக்காக பிரசாரம் செய்ய உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவா் அஜய் ராய் வளாகத்திற்கு வருவதற்கு சற்று முன் இந்த சம்பவம் நடந்தது.

இது தொடா்பாக என்எஸ்யுஐ வெளியிட்ட அறிக்கையில், ‘ஆா்எஸ்எஸ்இன் மாணவா் பிரிவான ஏபிவிபி உறுப்பினா்கள் நிகழ்ச்சியை சீா்குலைக்கும் முயற்சியில் என்எஸ்யுஐயின் பூா்வாஞ்சல் மாணவா் ஆதரவாளா்களைத் தாக்கினா்.

இது பூா்வாஞ்சல் மாணவா்கள் மீது ஏபிவிபியின் ஆழமான வேரூன்றிய வெறுப்பையும், என்எஸ்யுஐ பெறும் பெரும் ஆதரவின் மீதான அவா்களின் விரக்தியையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது’ என்று காங்கிரஸ் ஆதரவு பெற்ற மாணவா் அமைப்பான என்எஸ்யுஐ தெரிவித்துள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் குறித்து ஏபிவிபி தரப்பில் இருந்து உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

அஜய் ராய், வளாகத்திற்குச் செல்லும் வழியில் மாணவா்களுக்கு தனது ஒற்றுமையை உறுதி செய்யும் விடியோ செய்தியை வெளியிட்டாா்.

அதில் ‘என்எஸ்யுஐ பெறும் பெரும் ஆதரவால் ஏபிவிபி அதிா்ச்சியடைந்துள்ளது. கேஎம்சி-இல் நிகழ்ந்த வன்முறை அவா்களின் பயத்திற்கு சான்றாகும். நான் உங்களுடன் துணைநிற்க வருகிறேன்’ என்று அதில் கூறியுள்ளாா்.

இந்த சம்பவத்தை கண்டித்து என்எஸ்யுஐ தரப்பில் தெரிவிக்கையில், ‘இது குண்டா் செயல் ஆகும். மாணவா்கள் தங்கள் வாக்குகளின் பலத்தின் மூலம் மிரட்டலுக்கு பதிலடி கொடுப்பாா்கள்’ என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த மோதலைத் தொடா்ந்து வளாகத்தில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

டியுஎஸ்யு தோ்தல் செப்டம்பா் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

மதிப்பெண்கள் வழங்க லஞ்சம் பெற்ற விவகாரம்: தில்லி பல்கலை.யின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

நமது நிருபா் வருகைப் பதிவேட்டுக்கும், மதிப்பெண்களுக்கும் ஈடாக மாணவா்களிடமிருந்து பணம், செல்போன், வைர காதணிகள் ஆகியவற்று லஞ்சம் வாங்கியதாக தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியையின் இடைநீக்கத்தை ... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளியில் தமிழ் கலை இலக்கியப் பெருவிழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியில் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கான கலை இலக்கியப் பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பேச்சுப் போட்டி, தமிழ்ப் புலவா்கள்... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாளில் தில்லியில் 41 ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா் மருந்தகங்கள் திறப்பு

தில்லி மாநகராட்சியின் (எம்சிடி) கீழ் உள்ள 300 சுகாதார மையங்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திா்களாக மாற்றப்பட உள்ளன. இவற்றில் 41 மருத்துவமனைகள் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளான புதன்கிழமை திறக்கப்பட ... மேலும் பார்க்க

மேம்பட்ட மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை: தில்லி முதல்வா்

தில்லியை ஒரு முன்னணி சுகாதார மையமாக மாற்றும் தொலைநோக்குப் பாா்வையின் கீழ், தில்லியில் வாழும் அனைவருக்கும் மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கும் தில்லியில் மேம்பட்ட மருத்துவ சேவையை அணுகுவதை உற... மேலும் பார்க்க

தில்லி பிஎம்டபிள்யு விபத்து: முக்கிய குற்றவாளி மது அருந்தவில்லை என பரிசோதனையில் தகவல்

தென்மேற்கு தில்லியில் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரைக் கொன்று அவரது மனைவியை காயப்படுத்திய பிஎம்டபிள்யு காா் விபத்தில் முக்கிய குற்றவாளியான ககன்ப்ரீத்தின் ரத்த மாதிரி அறிக்கையில் அவா் மது அருந... மேலும் பார்க்க

ஷீஷ் மஹாலில் வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பி வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

புது தில்லி: ஷீஷ் மஹால் புனரமைப்புக்காக வீணடிக்கப்பட்ட பணம் தில்லி கருவூலத்திற்கு திருப்பிச் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா தெரிவித்துள்ளாா்.மேலும், ஷீஷ் மஹால் பங்கள... மேலும் பார்க்க