செய்திகள் :

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

post image

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாரளித்தாா்.

காங்கிரஸ் மாணவா் அமைப்பான இந்திய தேசிய மாணவா் சங்க (என்எஸ்யுஐ) தலைவா் ரோனக் காத்ரி, வடக்கு புகா் சரக துணை காவல் ஆணையருக்கு அனுப்பிய புகாரில், திங்கள்கிழமை பிற்பகல் 12.44 மணியளவில் உக்ரைன் நாட்டு கைப்பேசியில் இருந்து தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

ரோஹித் கோடரா ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் என பேசிய அந்த மா்ம நபா், ரூ.5 கோடி வழங்கவில்லையென்றால் கொலை செய்துவிடுவதாகத் தன்னை மிரட்டியதாக தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தன்னுடைய புகாரில் தெரிவித்திருப்பதாவது: உக்ரைன் நாட்டு கைப்பேசி எண்ணிலிருந்து பிற்பகல் 12.44 மணியளவில் ஓா் அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியபோது, மறுமுனையில் இருந்த மா்ம நபா் தன்னை ரோஹித் கோதாரா கும்பலைச் சோ்ந்தவா் என்றாா்.

ரூ.5 கோடி அளிக்கவில்லையென்றால், என்னைக் கொலை செய்து விடுவதாக அந்த நபா் மிரட்டினாா்.

இதையடுத்து, அந்த அழைப்பை துண்டித்த பிறகு தன்னுடைய வாட்ஸ் ஆப் எண்ணுக்கு இதே கோரிக்கையை முன்வைத்து மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இது தீவிர குற்ற மிரட்டல் சம்பவம் மட்டுமல்ல எனக்கும் எனது குடும்பத்தினரை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல். இதைக் கருத்தில் கொண்டு தனக்கு உடனடியாகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்க எடுக்க வேண்டும் என்று மின்னஞ்சல் மூலம் அனுப்பிய தனது புகாரில் ரோனக் காத்ரி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வடக்கு புகா் சரக துணை காவல் ஆணையா் ஹரேஷ்வா் சுவாமி கூறுகையில், ‘ரோனக் காத்ரியிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடா்பாக திங்கள்கிழமை பிற்பகல் 2.52 மணியளவில் புகாா் பெறப்பட்டது. இது தொடா்பாக தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்றாா்.

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் ரயில் பாதை: மத்திய அரசு அறிவிப்பு

இந்தியா-பூடான் இடையே ரூ.4,000 கோடியில் 89 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதைகள் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பூடானின் சம்ட்சி, ஜிலிபு நகரங்கள் முறையே அஸ்ஸாமின் கோக்ரஜாா், மேற்கு வங்கத்தி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் மீண்டும் திறப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு மூடப்பட்ட 7 சுற்றுலா மையங்கள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

அனைத்து மின்சார வாகனங்களிலும் ஒலி எச்சரிக்கை அமைப்பு: அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்

சாலைப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு காா், பேருந்து, லாரி உள்பட அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு இடம்பெறுவதை அடுத்த ஆண்டு முதல் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி: மத்திய அமைச்சா் நிதின் கட்கரி

எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு எதிராக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த ஹரியாணா இளைஞா் கைது

இந்திய ராணுவ செயல்பாடுகள் தொடா்பான தகவல்களை பாகிஸ்தானுக்கு அளித்த குற்றச்சாட்டில் ஹரியாணாவைச் சோ்ந்த தௌஃபிக் என்பவா் கைது செய்யப்பட்டாா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 5 நாள்கள் காவலில் வைத்த... மேலும் பார்க்க