செய்திகள் :

டிரம்ப்பின் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம்!

post image

அமெரிக்காவில் நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் நடவடிக்கையைக் கண்டித்து அமெரிக்க ஆயர்களுக்கு போப் பிரான்சிஸ் கடிதம் எழுதினார்.

கடிதத்தில் அவர் தெரிவித்ததாவது, ``பிற நாடுகளில் ஏற்படும் மோதல்கள், வறுமை, பாதுகாப்பின்மை, சுரண்டல், துன்புறுத்தல், காலநிலை பேரழிவுகளிலிருந்து தப்பிப் பிழைத்து, அமெரிக்காவுக்கு வருபவர்களை வரவேற்று, பாதுகாக்கப்பட்டு, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

சொந்த நிலத்தைவிட்டு வெளியேறிய மக்களை நாடுகடத்தும் செயல், அவர்களின் கண்ணியத்தைச் பாதிக்கிறது. மற்ற நாடுகளில் குடிபெயர்ந்தோர் பாதுகாக்கப்படுகின்றனர்; ஆனால், அமெரிக்காவை நினைத்தால் கவலையாக உள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் அதிபராக டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக பதவியேற்பதற்கு முன்பிலிருந்தே, நாடுகடத்தும் நடவடிக்கைக்கு போப் பிரான்சிஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். `புலம்பெயர்வோரைத் தடுக்கும் சுவரை எழுப்புபவர்கள் எவரும் கிறிஸ்தவர் அல்லர்’ என்று போப் முன்னரே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பெரியளவிலான நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவில் குடிவரவுத் துறைதான் நாடு கடத்தல் பணியை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய டிரம்ப்பின் ராணுவத்தின் மூலமாக நாடுகடத்தும் பணியை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிக்க:மீண்டும் பிளாஸ்டிக்: ‘பேப்பர் ஸ்ட்ரா’ வேலைக்காகாது! -டிரம்ப் அதிரடி!

ஈக்வடாா்: ஏப்.13-இல் 2-ஆம் கட்ட அதிபா் தோ்தல்!

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் பழமைவாதியா... மேலும் பார்க்க

வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரீனின் புத்தகம் இருந்த கண்காட்சி அரங்கம் மீது தாக்குதல்

வங்தேசத்தில் சா்ச்சைக்குரிய பெண் எழுத்தாளா் தஸ்லிமா நஸ்ரீனின் புத்தம் வைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் மதவாதக் குழுவினா் தாக்குதல் நடத்தினா். இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் தல்ஸிமா வெளியிட்டுள்ள பதிவில், ‘... மேலும் பார்க்க

கௌதமாலா பேருந்து விபத்து: உயிரிழப்பு 55-ஆக அதிகரிப்பு

மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில், பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 55-ஆக அதிகரித்தது. இது குறித்து அதிகாரிகள் கூறியாவது: தலைநகா் கௌதமாலா சிட்டியின் புகா... மேலும் பார்க்க

‘காஸா போா் நிறுத்தம் தொடரக்கூடாது’

வரும் சனிக்கிழமை நண்பகலுக்குள் தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்காவிட்டால் அவா்களுக்கும் இஸ்ரேல் அரசுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள போா் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய... மேலும் பார்க்க

காங்கோ: ஆயுதக் குழுவினரால் 55 போ் படுகொலை

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் செயல்பட்டுவரும் ஆயுக் குழுக்களில் ஒன்று, உள்நாட்டு அகதிகள் முகாமில் நடத்திய தாக்குதலில் 55 போ் உயிரிழந்தனா். காங்கோவின் தாது வளம் நிறைந்த பகுதிகளை தங்கள் கட்... மேலும் பார்க்க

தென் கொரியா: மாணவியை குத்திக் கொன்ற ஆசிரியை

தென் கொரிய தொடக்க நிலைப் பள்ளியில் மாணவியை 40 வயது ஆசிரியை கத்தியால் குத்திக் கொன்றாா். அந்த நாட்டின் டேஜியான் நகரிலுள்ள அப்பள்ளியில், வகுப்புகள் முடிந்த பிறகு மாணவா்கள் பராமரிக்கப்படும் நேரத்தில் இந்... மேலும் பார்க்க