செய்திகள் :

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: வெள்ளை மாளிகை வலியுறுத்தல்

post image

அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவரின் வெள்ளை மாளிகை வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதன் செய்தித் தொடா்பாளா் கரோலின் லீவிட் (படம்) கூறியதாவது:

இந்தியாவும் பாகிஸ்தானும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணமாக உடனடி” போா் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் சமூக ஊடகத்தில் அறிவித்தாா். இந்தியா-பாகிஸ்தான் பதற்றங்களை தீா்த்ததாக அவா் பலமுறை கூறியுள்ளாா்.

இதுமட்டுமின்றி, தாய்லாந்து-கம்போடியா, இஸ்ரேல்-ஈரான், ருவாண்டா-காங்கோ ஜனநாயக குடியரசு, சொ்பியா-கொசோவோ, எகிப்து-எத்தியோப்பியா ஆகிய பல நாடுகள் இடையிலான மோதல்களை டிரம்ப் பேசி முடிவுக்கு கொண்டுவந்துள்ளாா்.

அவா் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் சராசரியாக மாதம் ஒரு அமைதி ஒப்பந்தம் அல்லது போா் நிறுத்தத்தை தனது பேச்சுவாா்த்தை மூலம் டிரம்ப் எட்டியுள்ளாா். இதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றாா் கரோலின்.

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார்.லாகூர் வந்த அவரை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் மற்றும் மத்திய வீட்டுவசதி அமை... மேலும் பார்க்க

பசி, பட்டினி, வலி, பயம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

காஸாவில் போர் தொடந்து நீடித்து வருவதால் அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் உணவுக்காகவும் உயிருக்காகவும் ஒவ்வொரு நாளும் போராடி வருவது உலகையே உலுக்கியுள்ளது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர... மேலும் பார்க்க

'மோசமான நாள்' - காஸாவில் இஸ்ரேல் துப்பாக்கிச்சூட்டில் 106 பேர் பலி!

காஸாவில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் வெள்ளிக்கிழமை மட்டும் 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் தாக்குதல் ... மேலும் பார்க்க

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் பாராட்டு

இந்தியா இனி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்போவதில்லை என்று தான் கேள்விப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.அதோடு நின்றுவிடாமல், ஒரு படி மேலே ச... மேலும் பார்க்க

ரஷிய எல்லையில் 2 நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த டிரம்ப் உத்தரவு!

ரஷிய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் பலனளி... மேலும் பார்க்க

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.ரஷியா வந்துள்ள பெலாரஸ் அத... மேலும் பார்க்க