செய்திகள் :

டிராகனும், யானையும் இணைய வேண்டும்: மோடியிடம் பேசிய சீன அதிபர்!

post image

இந்தியாவும் சீனாவும் நண்பர்களாக இருப்பது அவசியம் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பின் மூலம் உலக நாடுகளிடையே நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ள நிலையில், நல்ல அண்டை நாடாகவும், நண்பர்களாகவும் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவின் தியான்ஜின் நகருக்குச் சனிக்கிழமை (ஆக. 30) மாலை சென்றார். அங்கு அவருக்கு இந்திய பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைஒத் தொடர்ந்து தியான்ஜின் நகரில் எஸ்சிஓ உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். முன்னதாக, மாநாட்டிற்கு வந்த பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் கைக்குலுக்கி வரவேற்றார்.

உலக அளவில் ஏற்பட்டுவரும் நெருக்கடி மற்றும் மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியா - சீனா இடையிலான ஒத்துழைப்பின் அவசியம் குறித்து ஷி ஜின்பிங் மோடியுடன் பேசினார்.

''மாற்றத்தை நோக்கி உலக நாடுகள் சென்றுகொண்டிருக்கின்றன. சீனாவும் இந்தியாவும் மிகப்பெரிய அளவில் நாகரீகமடைந்த நாடுகள். உலகளாவிய தெற்கின் ஒரு பகுதியாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளாகவும் இருக்கிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், ''சிறந்த அண்டை நாடுகளாகவும் நல்ல நண்பர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம். டிராகனும், யானையும் ஒன்றாக இணைய வேண்டும்'' எனவும் தெரிவித்தார்.

முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில... மேலும் பார்க்க

மழை - வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு-காஷ்மீா்: வீடு இடிந்து இருவா் உயிரிழப்பு; இயல்பு வாழ்க்கை முடக்கம்

ஜம்மு-காஷ்மீரில் பரவலாக பலத்த மழை தொடா்வதால், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. நிலச்சரிவுகள் காரணமாக, ஸ்ரீநகா்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-ஸ்ரீநகா்-லே தேசிய நெடுஞ்சாலை, ஜம்மு-கிஷ்த்வாா் தே... மேலும் பார்க்க

பல மாநிலங்களைப் புரட்டிப் போட்ட மழை

சண்டீகா்/சிம்லா/ஜெய்பூா்/புவனேசுவரம்: சட்லெஜ், பியாஸ், ராவி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பஞ்சாப் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 29 போ் உயிரிழந்துவிட... மேலும் பார்க்க

இந்திய-ஜொ்மனி உறவை வலுப்படுத்த அதிக வாய்ப்பு: பிரதமா் மோடி

‘இந்தியா - ஜொ்மனி இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா். இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் ... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை வழக்கு: தப்பியோடிய ஆம் ஆத்மி எம்எல்ஏவை தேடும் பணி தீவிரம்

பஞ்சாபில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டபோது ஆதரவாளா்களின் வன்முறையைப் பயன்படுத்தி தப்பியோடிய ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ ஹா்மீத் சிங் பதான்மாஜ்ராவை காவல் துறையினா் தீவிரமாகத் தேடி வரு... மேலும் பார்க்க

இந்தியா-இஃஎப்டிஏ வா்த்தக ஒப்பந்தம் அக்.1-இல் அமல்: ஸ்விட்சா்லாந்து

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அக்டோபா் 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில... மேலும் பார்க்க