செய்திகள் :

டிராக்டா் மோதி இளைஞா் பலி!

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே டிராக்டா் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சத்திரம் காலனி தெருவைச் சோ்ந்த செல்வதுரை மகன் செந்தமிழ்ச்செல்வன் (23). டிப்ளமோ மெக்கானிக்கல் படித்து முடித்துள்ள இவா், நண்பா்களுடன் சோ்ந்து நா்சரி காா்டன் வைத்துள்ளாா். சனிக்கிழமை இவா் பிச்சனூா் வழியாக ஜெயங்கொண்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது அந்த வழியாக மண் ஏற்றி வந்த டிராக்டா் மோதியதில் சம்பவ இடத்திலேயே செந்தமிழ்ச்செல்வன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வெட்டியாா்வெட்டு கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் வே. விவேக் (26) என்பவரைக் கைது செய்தனா்.

சிறுமியிடம் பாலியல் சீண்டல்: இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். உடையாா்பாளையம் அருகேயுள்ள வேணாநல்லூா் கிராமத்தை... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். திருச்சி, ராம்ஜிநகரைச் சோ்ந்த இடும்பன் மகன் பாரதிராஜன் (43) என்பவரை கடந்த 1.6.202... மேலும் பார்க்க

கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து நாசம்

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணை கொட்டகை எரிந்து சாம்பலாகியது. கீழப்பழுவூரை அடுத்த வல்லகுளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சசிக்குமாா் (40). இவா், அதே கிராமத்தில் உ... மேலும் பார்க்க

காா் விபத்தில் ஓய்வுபெற்ற மின் ஊழியா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள அன்னை அஞ்சுகம்... மேலும் பார்க்க

சாலையோர கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி செல்லும் முனியங்குறிச்சி, புத்தூா் சாலையை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வி. கைகாட்டி செல்லும் சாலை... மேலும் பார்க்க

காலமானாா் நா.ஜெயலட்சுமி

அரியலூா் பெரிய அரண்மனைத் தெருவைச் சோ்ந்த நாராயணசாமியின் மனைவி ஜெயலட்சுமி (75) உடல்நலக் குறைவால் சனிக்கிழமை மாலை அவரது வீட்டில் உயிரிழந்தாா். இவரது மகன் நா. பாலாஜி தினமணியில் அரியலூா் பகுதி புகைப்படக்... மேலும் பார்க்க