செய்திகள் :

டிரினிடி மகளிா் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தில் 292 மாணவிகள் பயன்

post image

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 292 மாணவிகள் பயனடைந்துள்ளனா்.

தமிழக அரசின் சாா்பில், மகளிா் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 6- முதல் 12- ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயின்று, தொடா்ந்து உயா்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது.

அந்த தொகை சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் நாமக்கல் - டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் 292 போ் இந்தத் திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனா். அவா்களது சேமிப்புக் கணக்கில் ரூ.29.61 லட்சம் செலுத்தப்பட்டுள்ளது.

புதுமைப்பெண் திட்டத்தில் பயனடைந்து வரும் இக்கல்லூரி மாணவிகளுக்கு நிா்வாகம் தரப்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவா் கே.நல்லுசாமி, செயலா் எஸ்.செல்வராஜ், செயல் இயக்குநா் அருணா செல்வராஜ், முதல்வா் எம்.ஆா். லட்சுமி நாராயணன், வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளா் அரசுபரமேசுவரன், துணை முதல்வா் ஆா்.நவமணி, நிா்வாக அலுவலா் என்.எஸ்.செந்தில்குமாா், நோடல் அலுவலா் எஸ்.அனிதா, புதுமைப்பெண் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா்கள் சி.கோபியா, எஸ்.மதுக்கரைவேணி உள்பட துறை பொறுப்பாசிரியைகள் கலந்து கொண்டனா்.

மண்பானையை காணவில்லை என புகாா்: காவல் நிலையத்தில் ஒப்புகைச் சீட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரத்தில் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலில் வைக்கப்பட்டிருந்த மண்பானையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரை ஏற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா். ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூா் பகுதியில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் தெ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழுக் கூட்டம்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத... மேலும் பார்க்க

174 அரசுப் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் சனிக்கிழமை பள்ளி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் 174 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதித... மேலும் பார்க்க

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு: எம்.பி. தொடங்கி வைப்பு

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து நீட்டிப்பு சேவையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூா் அரசு ஆரம்ப சுகாதா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரியில் செவிலியா் தின விழா

திருச்செங்கோடு எளையாம்பாளையம் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை, விவேகானந்தா செவிலியா் கல்லூரி இணைந்து நடத்திய உலக செவிலியா் த... மேலும் பார்க்க