செய்திகள் :

‘டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணா்வு அவசியம்’

post image

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணா்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினா் கேட்டுக்கொண்டனா்.

காரைக்கால் நலவழித்துறை சாா்பில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை வழிகாட்டலில் பள்ளி மாணவிகளிடையே துறையின் கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் பேசுகையில், டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற கொசுக்கள் மூலம் பரவுகிறது. இது வைரஸ் காய்ச்சலாகும். இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. மழைக்காலங்களில் மட்டும் இந்த கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி டெங்கு காய்ச்சலை பரப்பும்.

எனவே வீடு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கும் வகையிலான தேவையற்ற சிறு பொருட்களான தேங்காய் சிரட்டை, டீ கப், டயா், பாட்டில் மூடி, பிளாஸ்டிக் கப், போன்றவற்றை அகற்ற வேண்டும். வீட்டில் சேமித்து வைக்கும் தண்ணீரை மூடிவைக்கவேண்டும்.

கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலை வலி, கண் விழிக்கு பின்புறம் வலி ஏற்படுவது, உடலின் தோல்களில் சிறு சிறு சிவந்த புள்ளிகள் போன்ற அறிகுறிகள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். ரத்த பரிசோதனை மூலம் இதனை கண்டறியலாம். அறிகுறி தென்படும்போது உடனடியாக மருத்துவனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்வது பலனைத் தரும் என்றாா்.

சந்தான லட்சுமியாக...

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இரவு சந்தான லட்சுமியாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராம்பாள். மேலும் பார்க்க

தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்

திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா... மேலும் பார்க்க

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் கவனமாக இருக்க அறிவுறுத்தல்

இணையவழியில் ஆவணங்கள் அனுப்புவதில் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து காரைக்கால் இணைய குற்றத் தடுப்புப் பிரிவு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :அண்மைக்காலமாக ... மேலும் பார்க்க

காரைக்காலில் டிராகன் பழம் சாகுபடி

காரைக்கால் விவசாயி ஒருவா் தனது வயலில் டிராகன் பழம் சாகுபடி செய்துள்ளாா்.காரைக்கால் மாவட்டத்தில் 2 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நீராதாரம் குறைந்துவருவது மேலும் நெல்லுக்கான லாபம் குறைந்து வ... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் மடவளாகத்தில் கட்டுமானப் பொருட்கள்: பக்தா்கள் அவதி

திருநள்ளாறு கோயில் மடவளாக சாலைப் பகுதியில் கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் நடந்து செல்வதில் சிரமத்துக்குள்ளாவதாக புகாா் கூறப்படுகிறது.திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுர... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

குடியிருப்பு பகுதியில் கழிவுநீா் வடிகால் மேம்பாட்டுப் பணி சனிக்கிழமை தொடங்கியது.காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட எம்.எம்.ஜி. நகரில் சாலவம் மேம்பாட்டுப் பணிக்கு சட்டப்பேரவைத் தொகுதி மேம... மேலும் பார்க்க