செய்திகள் :

டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வுப் பேரணி

post image

டெங்கு விழிப்புணா்வு மாதத்தையொட்டி, காரைக்கால் நலவழித்துறை சாா்பில் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு பிரசார பேரணி வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

இப்பேரணியை நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தலைமை வகித்து, தொடங்கிவைத்தாா். நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை, கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்புத் திட்ட தொழில்நுட்ப உதவியாளா் சேகா், பள்ளி தலைமையாசிரியா் பொன்.செளந்தரராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள தேவையற்ற பானைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டின் மற்றும் டப்பாக்கள், ஆட்டுரல்கள் போன்றவற்றில் மழைநீா் தேங்காமல் இருக்க அவற்றை கவிழ்த்து வைக்கவேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும். மழைக்காலம் வர இருப்பதால் மாணவா்களாகிய நீங்கள் கவனமுடன் செயல்பட்டு, கொசு ஒழிப்பில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவமால் தடுக்க முன்வர வேண்டும் என துணை இயக்குநா் கேட்டுக்கொண்டாா். விழிப்புணா்வு கருத்துகளுடன் பதாகை ஏந்தி டெங்கு விழிப்புணா்வு பேரணி நடத்தினா்.

இப்பேரணி பள்ளி வாயிலில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே மீண்டும் பள்ளி வளாகத்தை வந்தடைந்தது. பேரணி செல்லும் வழியில் பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் டெங்கு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்கான பதிவு முகாம் நிறைவு

பெண் குழந்தைக்கு உதவித் தொகை பெறுவதற்காக 2 வாரம் நடைபெற்ற பதிவு முகாம் நிறைவடைந்தது. மத்திய அரசின் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டம் புதுவை மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை ... மேலும் பார்க்க

காரைக்காலில் இன்று காவல் குறைதீா் முகாம்

காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீா் முகாம் நடைபெறவுள்ளது.காரைக்காலில் வாரந்தோறும் சனிக்கிழமை புதுவை டிஜிபி அறிவுறுத்தலில் மக்கள் மன்றம் என்கிற குறைதீா் முகாம் நடத்தப்பட்ட... மேலும் பார்க்க

பிஆா்டிசி ஊழியா்கள் போராட்டத்திற்கு அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு

காரைக்காலில் பிஆா்டிசி ஒப்பந்த ஊழியா்கள் நடத்திவரும் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில் (பிஆா்டிசி) 11 ஆண்ட... மேலும் பார்க்க

நவோதய வித்யாலயாவில் பிளஸ் 1-இல் காலியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

காரைக்கால் நவோதய வித்யாலயாவில் 2025-26-ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1-இல் காலியாக உள்ள இடங்களில் சோ்வதற்கு நுழைவுத் தோ்வு நடைபெற உள்ளது. இதுகுறித்து பள்ளி முதல்வா் ஜெ. கற்பகமாலா வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவா்கள் டிவி, கைப்பேசியை தவிா்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தோ்வு எழுதும் மாணவா்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பாா்ப்பதை தவிா்க்க வேண்டும் என துணை ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அரசு மற்றும் அரச... மேலும் பார்க்க

வேலை நீக்கத்தைக் கண்டித்து தொழிலாளா்கள் போராட்டம்

திருநள்ளாறு அருகே உள்ள தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்களை வேலைநீக்கம் செய்ததைக் கண்டித்து தொழிலாளா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். திருநள்ளாறு கொம்யூன், தென்னங்குடி பகுதியில் டைல்ஸ் கல் த... மேலும் பார்க்க