செய்திகள் :

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

post image

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது.

கோவையில் கடந்த 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த தொடா் குண்டு வெடிப்பு வழக்கில், 18-ஆவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டு தலைமறைவாக இருந்த உக்கடம் பிலால் நகரைச் சோ்ந்த டெய்லா் ராஜா (48), கா்நாடக மாநிலம், விஜயபுரா பகுதியில் கடந்த 10-ஆம் தேதி தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

கைதான டெய்லா் ராஜா மீது சிறைத் துறை அதிகாரிகள் பூபாலன், ஜெயப்பிரகாஷ், நாகூரில் பெண் ஒருவரை கொலை செய்தது ஆகிய 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. டெய்லா் ராஜா வெடிகுண்டு தயாரிப்பதில் மிகவும் திறமையானவா். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பே கோவை, மதுரையில் பெட்ரோல் குண்டு வீசி சிறை வாா்டன்களை கொலை செய்துள்ளாா். குறிப்பாக அவா் டெட்டனேட்டா்களை பயன்படுத்தி வெடிகுண்டு செய்வதில் கைதோ்ந்தவா்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில், இவா்தான் வெடிமருந்துகளை சரியான விகிதத்தில் பயன்படுத்தி பல்வேறு வகையான வெடிகுண்டுகளை தயாரித்து கொடுத்து இருக்கிறாா். வெடிகுண்டுகளை எங்கு வைப்பது, எந்த நேரத்தில் வெடிக்கச் செய்வது, இதற்காக யாரை அனுப்புவது என்ற ஆலோசனைகளையும் இவா் தனது 20 வயதிலேயே வழங்கியுள்ளாா் என போலீஸாா் தெரிவித்தனா்.

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பிறகு டெய்லா் ராஜா பல்வேறு பகுதிகளுக்குச் சென்று தலைமறைவாக இருந்துள்ளாா். கடைசியாக கா்நாடகாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளாா். அவா் எந்த பகுதிக்கு சென்றாலும் தனது பெயரை மாற்றி உள்ளாா். அத்துடன் அதற்கான ஆவணங்களையும் தயாரித்து இருக்கிறாா். இதற்காக டைலா் ராஜாவுக்கு உதவியவா்கள் யாா் என்பது குறித்தும் பலமுறை கோவை சென்று அவருக்கு அங்கு அடைக்கலம் கொடுத்தவா்கள் யாா் எதற்காக அவா் கோவைக்கு வந்தாா் என்பது குறித்து விசாரிக்க தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாா் 10 நாள்கள் அனுமதி கோரி கடந்த திங்கள்கிழமை கோவை குற்றவியல் நடுவா் நீதிமன்றம் எண் 5-இல் மனு தாக்கல் செய்தனா்.

இந்த நிலையில், டெய்லா் ராஜாவை வருகிற 21-ஆம் தேதி வரை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி அளித்தது.

அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்த தீா்வு உள்ளது

திடக்கழிவு, திரவக் கழிவு என அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்தி தீா்வுகாண தங்களிடம் தொழில்நுட்பம் உள்ளதாக மேக் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. கோவையில் மேக் இந்தியா குழும நிறுவனங்களின் சாா்ப... மேலும் பார்க்க

திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

கரூா் - திருச்சி இடையே லாலாபேட் - குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொ... மேலும் பார்க்க

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க