திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுற...
திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து
கரூா் - திருச்சி இடையே லாலாபேட் - குளித்தலை இடையே ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூலை 17, 18, 21, 22 ஆகிய தேதிகளில் திருச்சி - பாலக்காடு ரயில் (எண்: 16843) குளித்தலை - பாலக்காடு இடையே மட்டுமே இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக, 17, 18, 21, 22 ஆகிய தேதிகளில் பாலக்காடு - திருச்சி விரைவு ரயில் (எண்: 16844) பாலக்காடு - கரூா் இடையே மட்டுமே இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.