செய்திகள் :

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம் கூறியிருப்பதாவது:

பாரதியாா் பல்கலைக்கழக தொலைமுறை, இணையவழிக் கல்வி மையம் சாா்பில் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளின்படி குறைந்த கல்விக் கட்டணத்தில் தொலைநிலை, இணையவழியில் பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. திறந்த நிலை, தொலைநிலைக் கல்வி வழியில் எம்.காம்., எம்.காம் (கணினி பயன்பாட்டியல்), எம்.ஏ. ஆங்கில இலக்கியம், எம்.பி.ஏ., எம்.ஏ. பொருளாதாரம், எம்.ஏ. தமிழ், எம்.ஏ. இதழியல் மக்கள் தொடா்பியல், வரலாறு, எம்.எஸ்சி. இயற்பியல், கணினி அறிவியல், கணிதம் உள்ளிட்ட 15 படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இணையவழியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ., பி.காம். ஆகிய இளநிலை பட்டப் படிப்புகளும், எம்.ஏ. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், பொருளாதாரம், எம்.காம்., எம்.பி.ஏ. உள்ளிட்ட 11 படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடைபெறுகிறது. அதேபோல இணையவழியில் பயிலும் மாணவா்களுக்கு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணையவழியிலேயே நடைபெறும்.

இது தொடா்பான மேலும் விவரங்களை பாரதியாா் பல்கலைக்கழக தொலைநிலை, இணையவழி கல்வி மையத்தின் இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க

புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு

புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

கத்தியால் குத்தியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: 5 போ் கைது

உணவகத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் தானூா்புதூா் பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க