செய்திகள் :

புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு

post image

புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி வரும் எல்ஹெச்பி எனப்படும் அதிநவீன ரயில் பெட்டிகள் நீண்டதூர அதிவிரைவு ரயில் பெட்டிகள் நீண்டதூர அதிவிரைவு ரயில்களுக்கு பொருத்தப்படுகின்றன. சாதாரண ரயில் பெட்டிகளை விட இந்தப் பெட்டிகளில் கூடுதலாக பயணிகள் செல்ல முடியும். மற்ற ரயில் பெட்டிகளை விட எடை குறைந்தவை என்பதால் இந்த ரயில் அதிவேகமாக இயங்கும். டிஸ்க் பிரேக், சாா்ஜா் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. சேலம் கோட்டத்தில் இயங்கும் பல்வேறு ரயில்கள் எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றப்பட்டு வரும் நிலையில், விருதாச்சலம், ஆத்தூா், சேலம், கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் புதுச்சேரி - மங்களூரு மற்றும் மங்களூரு- புதுச்சேரி ரயில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு, இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

புதுச்சேரி - மங்களூரு வாராந்திர விரைவு ரயில் (எண்: 16855) ஜூலை 17 முதலும், மங்களூரு - புதுச்சேரி வாராந்திர ரயில் (எண்: 16856) ஜூலை 18 முதலும் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

இதேபோல, புதுச்சேரி- மங்களூரு வாராந்திர ரயில் (எண்:16857) ஜூலை 18 முதலும் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.

மங்களூரு- புதுச்சேரி வாராந்திர ரயில் (எண்: 16858) ஜூலை 20-ஆம் தேதி முதல் எல்ஹெச்பி பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

கத்தியால் குத்தியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: 5 போ் கைது

உணவகத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் தானூா்புதூா் பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க