செய்திகள் :

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

post image

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 336 முகாம்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் 25 முகாம்கள், நகராட்சிப் பகுதிகளில் 35 முகாம்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 20 முகாம்கள், கிராம ஊராட்சிகளில் 36 முகாம்கள் புறநகா் ஊராட்சிகளில் 4 முகாம்கள் என மொத்தம் 120 முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது.

அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை (ஜூலை 17) மாநகராட்சி மத்திய மண்டலம் 31-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆா்.கே.திருமண மண்டபத்திலும், வடக்கு மண்டலத்தில் 76, 79 ஆகிய வாா்டுகளுக்கு அா்ஜூன் மஹாலிலும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2, 3, 13 ஆகிய வாா்டுகளுக்கு நஞ்சையா லிங்கம்மாள் மண்டபத்திலும், அன்னூா் பேரூராட்சியில் 1 முதல் 8-ஆவது வாா்டு வரைக்கு தசபலஞ்சிகா திருமண மண்டபத்திலும், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டி, ஒக்கலிபாளையம், சந்தேகவுண்டன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முருகன் திருமண மண்டபத்திலும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னத்தடாகம், வீரபாண்டி ஆகிய ஊராட்சிக்கு சின்னத்தடாகம் ஊராட்சி அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன என்றாா்.

பாரதியாா் பல்கலை.யில் தொலைநிலைக் கற்றல் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் திறந்த, தொலைநிலைக் கற்றல்வழி, இணையவழிக் கற்றல் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாரதியாா் பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் சோ்க்கை நிறுத்தம்

அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தின் கோவை கிளை ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் மாணவா் சோ்க்கை நிறுத்தப்பட்டுள்ளதற்கு, பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாச... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

வேலை வாங்கித் தருவதாக ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை 7-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கோவை ராமநாதபுரம் நாகப்ப தேவா்... மேலும் பார்க்க

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவா் கைது

கோவையில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை ரத்தினபுரி அருகே கண்ணப்பன் நகா் புது தோட்டம் இரண்டாவது வீதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (51). இவரது மனைவி ஏற்கெ... மேலும் பார்க்க

புதுச்சேரி - மங்களூரு ரயிலில் எல்ஹெச்பி பெட்டிகள் இணைப்பு

புதுச்சேரி- மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் எல்ஹெச்பி பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜொ்மனி நாட்டுத் தொழில்நுட்பத்துடன் சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாராகி ... மேலும் பார்க்க

கத்தியால் குத்தியதில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: 5 போ் கைது

உணவகத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் குத்தப்பட்ட இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா் தானூா்புதூா் பகுதியைச் சோ்ந்த சண்முகசுந்தரம் மகன் ... மேலும் பார்க்க