செய்திகள் :

டெல்லி: தீ விபத்தில் தப்பிக்க, பால்கனியில் இருந்து குதித்த 3 பேர் உயிரிழப்பு

post image

டெல்லி துவாரகைப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் நேற்று காலை 10 மணியளவில் தீப்பிடித்திருக்கிறது. தீயும், புகையும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

அதிலிருந்து தப்பிக்க அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மற்றும் சிறுமி பால்கனியில் இருந்து குதித்துள்ளனர். இவர்களுடைய தந்தை யஷ் யாதவ்வும் (35 வயது) பால்கானியில் குதித்துள்ளார். இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றப்போது, ஏற்கெனவே இவர்கள் மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தீ விபத்து - டெல்லி
தீ விபத்து - டெல்லி

யாதவின் மனைவி மற்றும் மூத்த மகன் மட்டும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த தீ விபத்து பெரிதும் பரவாமல் இருக்க, உடனடியாக அங்கே மின்சாரம் மற்றும் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் தீவிபத்து ஏற்பட்டிருந்ததால், ஸ்கை லிஃப்ட் மூலம் தீயணைப்புத் துறை மக்களை மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை: மீட்புப் பணியில் காவலர் மரணம்; அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு; நிவாரணம் அறிவித்த முதல்வர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வி.கோவில்பத்து செங்கல்சூலையில் பணிபுரியும் செய்யதுங்கநல்லூர் மேலநாட்டார்குளத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்குத் தனது இருசக்கர வா... மேலும் பார்க்க

மும்பை புறநகர் ரயிலில் தொங்கியபடி பயணம்; அதிர்ச்சி தரும் பலி எண்ணிக்கை; தானியங்கி கதவு எப்போது?

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருக்கிறது. புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிவிடும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு, மும்பை ரயில்வே-க்... மேலும் பார்க்க

தென்காசி: கழன்று ஓடிய அரசுப் பேருந்து சக்கரங்கள்; மருத்துவமனையில் 3 மாணவர்கள்; அரசு சொல்வது என்ன?

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற இடத்தில், 87 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தின், பின்புற ஆக்சில் உடைந்ததில், சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடி விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் காயங்களுடன்... மேலும் பார்க்க

``ஜூலை பாதி வரை நிறுத்தி வைக்கிறோம்..'' - விமான விபத்தையடுத்து ஏர் இந்தியா அதிரடி முடிவு!

குஜராத் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 171 விமானம் கடந்த 12-ம் தேதி லண்டனுக்கு கிளம்பியது. கிளம்பிய கிட்டத்தட்ட 5 நிமிடங்களிலேயே, அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்ல... மேலும் பார்க்க

Plane Crash: அகமதாபாத் விமான விபத்து; கருப்பு பெட்டிகள் ஆய்வுக்காக அமெரிக்கா செல்கிறதா?

சேதம் அடைந்த கருப்பு பெட்டிகள்கடந்த ஜூன் 12-ம் தேதி, மதியம் 1:38-க்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சுமார் 1:43 மணியளவில் விபத்தில் சிக்கியது. அந்த போயிங் 171 விமானத்தில் பயணித்த 2... மேலும் பார்க்க

திருச்சி: அரசு பேருந்தும், அரசு வாகனமும் மோதி விபத்து; பரிதாபமாக உயிரிழந்த முசிறி ஆர்டிஓ

மதுரையைப் பூர்வீகமாக கொண்ட ஆரமுத தேவசேனா (வயது: 52), திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தார்.இவர், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை... மேலும் பார்க்க