செய்திகள் :

டெஸ்ட்டில் கேப்டனாகும் விருப்பம் இருக்கிறது: ஜடேஜா

post image

டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.

இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட்டில் 2012-இல் இங்கிலாந்து எதிரான போட்டியில் அறிமுகமானார்.

தற்போது, ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதலிடத்தில் ஓராண்டாக நீடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார். 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியயிருக்கும் ஜடேஜா 3,370 ரன்களும் 323 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தியுள்ளார்.

சமீபத்தில் ரோஹித் சர்மா, கோலி டெஸ்ட்டில் இருந்து விலகியதால் ஷுப்மன் கில் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அஸ்வின் உடனான யூடியூப் நேர்காணலில் ஜடேஜா பேசியதாவது:

வெவ்வேறு கேப்டன்களிடம் விளையாடி இருக்கிறேன்

நிச்சயமான எனக்கும் டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நான் பல கேப்டன்கள் தலைமையில் விளையாடியுள்ளேன்.

நான் விளையாடிய கேப்டன்களின் ஒவ்வொருவரின் மனநிலை குறித்தும் எனக்கு நன்றாகத் தெரியும். வீரர்களுக்கு என்ன தேவை என்பதும் எனக்கு புரியும்.

ஒவ்வொரு கேப்டனுக்கும் அந்த அணியை வழிநடத்துவதில் வெவ்வேறு மாதிரியான அணுகுமுறைகள் இருக்கும்.

நான் தோனி தலைமையில் அனைத்து வடிவங்களிலும் விளையாடி இருக்கிறேன். அவருடைய சிந்தனைகள் மிகவும் எளிமையாக இருக்கும்.

டி20, டெஸ்ட் போட்டிகள் வெவ்வேறானவை

ஒரு பேட்டர் குறிப்பிட்ட ஷாட்டினை அடிப்பார் என உணர்ந்தால் அந்தப் பகுதியில் ஃபீல்டர்களை நிறுத்தி பேட்டரை அசௌகரியத்து உள்ளாக்குவார் என்றார்.

டி20, ஐபிஎல் போட்டிகளில் அனைத்து பந்துகளுமே முக்கியமானது. இதுமாதிரி டெஸ்ட் போட்டிகள் கிடையாது. அனைத்து பந்துகளுக்கும் ஃபீல்டிங் மாற்ற தேவையில்லை.

டெஸ்ட்டில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ப 2, 3 ஃபீல்டர்களை மாற்றலாம். பேட்டருக்கு ஏற்ப மாற்றத்தேவையில்லை. எளிமை, ஆனால் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறினார்.

சமீபத்தில் அஸ்வின், “ஏன் ஜடேஜாவை டெஸ்ட்டில் கேப்டனாக்கக் கூடாது? புதிய கேப்டனுக்கு செல்வதைவிட அனுபவமிக்க வீரரை கேப்டனாக்கலாமே” எனக் கூறியிருந்தார்.

முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்; இந்தியா ஏ 557 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவன் அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (மே 31) அறிவித்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்... மேலும் பார்க்க

கைவிரல் முறிவு; மே.இ.தீவுகள் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து ஆல்ரவுண்டர்!

கைவிரல் முறிவு காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் விலகியுள்ளார்.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் ... மேலும் பார்க்க

இளம் இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா? ஏபி டி வில்லியர்ஸ் கூறுவதென்ன?

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள இளம் இந்திய அணி குறித்து தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பேசியுள்ளார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ... மேலும் பார்க்க

ஐரோப்பிய கால்பந்து கழகத் தலைவரைச் சந்தித்த ஜெய் ஷா..! கிரிக்கெட் - கால்பந்து ரசிகர்கள் மகிழ்ச்சி!

ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஐரோப்பிய கால்பந்து கழகத் தலைவர் அலெக்சாண்டர் செஃபெரினைச் சந்தித்தார். பிசிசிஐ செயலராக கடந்த 5 ஆண்டுகளாக பதவி வகித்த ஜெய் ஷா கடந்த டிச.2024 முதல் ஐசிசியின் புதிய தலைவராகப் பொறுப்பே... மேலும் பார்க்க

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம்: ஜஸ்பிரித் பும்ரா

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் தொடர்ச்சியாக விளையாடுவது கடினம் என இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந... மேலும் பார்க்க