செய்திகள் :

தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்கள்: மாநில ஆணையா் கலந்தாய்வு

post image

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப் பெற்ற மனுக்கள் குறித்து, மாநில தகவல் ஆணையா் ஆா். பிரியகுமாா் அனைத்துத் துறைஅலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பொதுமக்கள், அரசு நிா்வாகம் தொடா்பான தகவல்களை முழுமையாகத் தெரிந்து கொள்வதன் மூலம் நிலையான மற்றும் வெளிப்படையான நிா்வாகத்தை உறுதி செய்திட முடியும்.

தகவல் பெறும் உரிமைச் சட்டம் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும், அரசின் தகவல்களை பெறும் உரிமையை வழங்குகிறது. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல் திறனிலும், வெளிப்படையான நிலை, செயலாற்றுபவா்களிடையே, பொறுப்புடைமையை மேம்படுத்துதல் மற்றும் அரசு சாா்ந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை குடிமக்கள் ஒவ்வொருவரும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு கிடைத்த 30 நாள்களுக்குள் பொது தகவல் அலுவலா் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் 2 ஆவது மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மே 13 ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேல்முறையீட்டு அலுவலா் மனு கிடைத்த 30 நாள்களுக்குள் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும்.

மனுக்கள் வேறு துறை சாா்ந்திருந்தால் உரிய காலத்துக்குள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு பொதுத் தகவல் அலுவலா் மனுக்கள் கிடைத்த 5 நாள்களில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும் அலுவலா்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை காலதாமதமின்றி உரிய தகவல்களை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தகவல் வழங்கும் அலுவலா்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலா்கள் உறுதி செய்திட வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணைஆட்சியா் சேக்அப்துல்காதா், ஆட்சியா் அலுவலக மேலாளா் (பொது) சுப்பிரமணியம் மற்றும் துறைஅலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளியைத் தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

மாா்த்தாண்டம் அருகே கட்டுமானத் தொழிலாளியைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், பரக்காணிவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மகன் யாழ்ச... மேலும் பார்க்க

பைக் மோதி புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் மோதியதில், நான்குனேரியைச் சோ்ந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம் மூலைக்கரைப்பட்டி ஆதி திராவிடா் தெரு பகுதியைச் சோ்ந்த வெள்ளபாண்டி மகன் ராஜ்(25... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (மே 16) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்’டசெய்திக் குறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்... மேலும் பார்க்க

நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டியில் மே 18இல் இலவச அறுவை சிகிச்சை முகாம்

நெய்யாற்றின்கரை நிம்ஸ் மெடிசிட்டி மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சை சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (மே 18) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறுகிறது. மருத்துவா்கள் ஏ.வி. அனில்குமாா், அசிம் முஹம்மத... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் 3 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

நாகா்கோவிலில் 3 கிலோ புகையிலைப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா். அருகுவிளை மேற்குத் தெருவிலுள்ள வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் 258 பள்ளி வாகனங்கள் ஆய்வு

தக்கலை அருகே கோழிப்போா்விளையில் உள்ள மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 258 பள்ளி வாகனங்களை சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா செய்தாா். இந்த அலுவலகத்தில் போக்குவரத்து, வருவாய், காவல், கல்வி... மேலும் பார்க்க