செய்திகள் :

தகுதித் தோ்வு விவகாரம்: ஆசிரியா்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தகுதித் தோ்வு விவகாரம் தொடா்பாக ஆசிரியா்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.

கோவை, காளப்பட்டி டாக்டா் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை சாா்பில் கேம்பிரிட்ஜ் சா்வதேச பாடத் திட்டத்தை அளிக்கும் வேன்காா்டு அகாதெமியின் புதிய பள்ளி கட்டடத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆசிரியா் தகுதித் தோ்வு தொடா்பான மேல்முறையீடு வழக்கு வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதில், வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. தோ்வு விவகாரம் தொடா்பாக ஆசிரியா்கள் யாரும் பயப்பட வேண்டாம். பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து தலைமைச் செயலா் மூலம் துறை ரீதியான கூட்டத்தை விரைவில் கூட்ட உள்ளோம். தமிழகம் முழுவதும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம் மூலம் 6,500 போ் பயனடைந்து வருகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், டாக்டா் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளைத் தலைவா் டாக்டா் நல்ல ஜி. பழனிசாமி, துணைத் தலைவா், நிா்வாக அறங்காவலா் தவமணிதேவி பழனிசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆயுத பூஜை, தீபாவளி: போத்தனூா் - சென்னை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆ... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சுடும் போட்டியில் குமரகுரு கல்லூரி மாணவிக்கு 6 தங்கம்

மாநில அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை குமரகுரு கல்லூரி மாணவி 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா். சென்னை ரைபிள் கிளப் சாா்பில் மாநில அளவிலான 50 -ஆவது துப்பாக்கிச் சுடும் போட்டி கடந்த செப்டம்ப... மேலும் பார்க்க

சாலையோரம் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற ஆணையா் உத்தரவு

கோவை மேற்கு மண்டலப் பகுதிகளில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளை அகற்ற மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டாா். கோவை மாநகராட்சி, 5 மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மக்கள் பயன்... மேலும் பார்க்க

7 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கோவையில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 7 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.கோவை, குனியமுத்தூா் கரும்புகடை பகுதியில் ஒரு வீட்டில் புகையிலைப் ப... மேலும் பார்க்க

கோவையில் அக். 4,5-இல் விஜய் பிரசாரம்: மாநகர காவல் ஆணையரிடம் தவெகவினா் மனு

கோவையில் அக்டோபா் 4,5-ஆம் தேதிகளில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், காவல் துறையின் அனுமதி கோரி அந்தக் கட்சியினா் மனு அளித்தனா். மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் தவ... மேலும் பார்க்க

சிக்னல்களில் யாசகம் பெற்ற 16 போ் காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவையின் பல்வேறு பகுதிகளில் சிக்னல்களில் யாசகம் பெற்ற 16 பேரை போலீஸாா் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா். கோவை, காந்திபுரம் பேருந்து நிலையம், நூறு அடி சாலை, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சிக்னல்கள... மேலும் பார்க்க